This gallery contains 9 photos.
….
This gallery contains 12 photos.
மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading
This gallery contains 6 photos.
உதவும் தன்மை உடையவர், உதவும் நிலையில் உள்ளவர், செல்வந்தர், அதிகாரத்தில் இருப்போர், ஆட்சியில் இருப்போரிடம் அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான உணர்ச்சி கருணை. …… நாஞ்சில் நாடன்
This gallery contains 6 photos.
திருநாவுக்கரசர் உரைக்கும் ‘நடலை இல்லோம்’ எனும் சொற்றொடர்க்கு- வஞ்சனை இல்லோம், பொய்மை இல்லோம், பாசாங்கு இல்லோம், துன்பம் இல்லோம், நடுக்கம் இல்லோம் -என எப்பொருளும் சொல்லலாம்…..நாஞ்சில் நாடன்
This gallery contains 6 photos.
என்றாலும் பொறுக்கி என்று அறியப்படுகிற சிலரை சமூகம் கடவுள் என்றும் கொண்டாடுகிறது! கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது நமக்கு!……நாஞ்சில் நாடன்
This gallery contains 7 photos.
பழமானாலும் காயானாலும் கல் வைத்துப் பழுக்க வைப்பதும், இரசாயன ஊசிகள் ஏற்றுவதும், கெமிக்கல் பொடிகள் தூவுவதும், இரசாயங்கள் கரைத்த நீரில் முழுக்காட்டி எடுப்பதும் வணிக நோக்கங்கள், பாவக் கூறுகள். குற்றச் செயல்கள். வாங்கித் தின்பவருக்கு எந்நோய் பெருகினால் என்ன? புற்று வைத்தால் என்ன? தம் பக்கறை நிரம்பினால் போதும் என்பது வணிகச் செம்மல்களின் பக்திமனம்……..நாஞ்சில் நாடன்
பழமும் கனியும் – நாஞ்சில் நாடன் குரல்: ஆனந்தராணி பாலேந்திரா
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் நகரப் பேருந்தில் ஏறியதும், யன்னலோர இருக்கை கிடைத்தால் நமக்கது அதிருஷ்டம். ரேஷன் கடைக்கு சாமான் வாங்கப் பையைத் தூக்கிப் போய், அங்கு நீங்கள் வாங்க விரும்பிய பச்சரிசி இருந்தால் உமக்கது அதிருஷ்டம். சீரியல் நேரத்தில் மின்சாரம் போகாதிருந்தால் அதிருஷ்டம், தாமதமாகப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தம் சேர்ந்து, உடனே பேருந்து கிடைப்பது அதிருஷ்டம். பன்னப் … Continue reading
This gallery contains 1 photo.
காரைக்குடி, காசி போல் புனித பூமி துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே … Continue reading
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் ‘கண்ணீரும் கம்பலையும்’ எனும் சொற்றொடரின் கம்பலை எனும் சொல் தேடிப் புறப்பட்ட போது, அது என்னைத் தொல்காப்பியம் வரை நடத்திச் சென்றது. கம்பலை எனும் தலைப்பில் முழுநீளக் கட்டுரை எழுதவும் தூண்டியது. அதுவே பிறகெனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்புமாயிற்று. அஃதே போன்று கருதித்தான் கால் பெயர்த்தேன் ‘கத்தி கப்படா’ எனும் சொற்றொடர் … Continue reading
This gallery contains 1 photo.
நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை … Continue reading
This gallery contains 1 photo.
“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading
This gallery contains 9 photos.
தினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம். ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.
This gallery contains 1 photo.
ஆவநாழி நாஞ்சில் நாடன் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல், “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை? என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல், “படிவட்டத் … Continue reading