Monthly Archives: ஏப்ரல் 2020

சவம் நினைந்து உரைத்தல்

This gallery contains 10 photos.

சவம் நினைந்து உரைத்தல் நாஞ்சில் நாடன் “சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி. நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கொடுப்பார் இலானும் கெடும்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்