Monthly Archives: ஜூலை 2011

கல்லும் கவியும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மனதறிந்து குலவுகிறது காற்று   மரங்களுக்கும் மறுப்பில்லை முன்னிரவில் சிலம்பிய புட்களெல்லாம் பசியாறி சிறகோய்ந்து இறகின் கதகதப்பில் பார்ப்புகளைச் சேர்த்தணைத்து நாளைய பறப்பின் தூரங்களை காத்திருக்கும்     பாம்புகள் வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றராய் தேரையும் சுண்டெலிகளும் பறவை முட்டைகளும் தேடி ஊர்வது காண மனதிரங்கும் கையும் காலும் சிறகும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 5.1

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் (ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த நாவலை நாஞ்சில் நாடன் கொண்டு சென்றிருக்கும் விதமும், நாவலின் ஓட்டமும், அதன் முடிவைத்   தீர்மானித்திருக்கும் அழகும் – அற்புதம்…….வாசகர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மொழி

This gallery contains 5 photos.

ஒரு சமூகம் வழிவழியாகக் கொண்டிருக்கும் நெறிகளின் அடிப்படையில் அச்சமூகம் நோக்கிப் பேசுபவர்கள் ஒருவகைப் படைப்பாளிகள். இவர்களை அச்சமூகத்தின் குலக்குழு பாடகர்கள் என்று அடையாளப்படுத்தலாம். நாஞ்சில் அத்தகையவர். (ஜெயமோகன்) sisulthan            

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

விவசாயிகளே… ரசாயன மோகத்தை விட்டொழியுங்கள்!

This gallery contains 4 photos.

இலக்கியவாதிகளின் இயற்கைப் பாசம்!  எண்டோசல்ஃபான் ஒரு தொடக்கம்தான். பன்னாட்டு வணிகர்கள் அதைவிடக் கொடிய விஷத்தை விற்பனை செய்து, விளைபொருட்களை நஞ்சாக்கி வருகிறார்கள்” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ‘குக்கூ’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கான இயக்கத்தை நடத்தி வரும் அரச்சலூரைச் சேர்ந்த ‘குக்கூ’ சிவராஜ், நண்பர்களுடன் இணைந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மிதவை….9.0

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடனின் படைப்புலகு ஒரு யதார்த்தவாதி உண்மையுடனும் நேர்த்தியுடனும் தன் சக வாழ்வைக் கண்டு பதிவு செய்ததின் விளைவுகளாக உள்ளன.இப்படைப்புகளில் இருந்து நாம் பெறும் உன்னத அனுபவம் என்பது இவற்றில் உள்ள நேர்மைதான்.சவரக்கத்திநுனி போன்ற நேர்மை. (ஜெயமோகன்) நாஞ்சில் நாடன் முன்கதை:மிதவை தொடர்  தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) முற்றும்.

This gallery contains 3 photos.

    ஆனால் பெரும் படைப்பாளிகள் எதிர்காலத்தை தொலைதூரத்திற்கு உற்றுப் பார்க்கிறார்கள். நாளைக்குரிய ஒழுக்க அற நெறிகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆகவே பல சமயம் சமகாலத்தில் அவர்கள் ஒழுக்க மறுப்பாளர்களாகவும் கலகக்காரர்களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்; வெறுக்கப்படுகிறார்கள். அச்சமூகம் அதேயளவு முன்னேறிய பின் கண்டடையப்படுகிறார்கள் (ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் முன்கதை:கும்பமுனி முற்றும். எஸ்.ஐ. சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம்

This gallery contains 1 photo.

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பஞ்சம்

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம் பஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது.  வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன்.

This gallery contains 1 photo.

கானா பிரபா நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பமுனி (மணமானவருக்கு மட்டும்) 4

This gallery contains 11 photos.

அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சூரல் பம்பிய சிறு கான் யாறு

This gallery contains 13 photos.

தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது. சங்க இலக்கிய வரியோ எனும் மயக்கம். சூரல் எனில் மூங்கிலில் ஒரு வகை. பம்பிய எனில் அடர்ந்த, செறிந்த, நெருங்கிய, பின்னிப் படர்ந்த. சிறு கான் யாறு எனில் சிறிய காட்டாறு. தொகுப்பின் ஆசிரியர், எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங், அந்த வரி எங்கு வருகிறது என இன்னும் தேடிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒப்பாரி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ……………… துவைத்து அலசினாற் போகாது அக்கறை யமன் நிறம் சாவின் சுவை நாசி பொசுக்கும் கந்தம் செவிக்குக் கொதி ஈயம் குணம் வஞ்சம் சூது …………… ஏகலைவன் கர்ணன் வாலி கோவலன் ஈழத்து மாவீரன் எனப் பலர் வாய்க்கரிசி ……………….. நட்டகல் பேசுமோ நாதன் உலாப் போயபின் ………………….. துரித கதித் தாளங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுதிக்கும் மதயானை..5.0

This gallery contains 14 photos.

வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் என்றும் வகை பிரித்துக் கொண்டிருந்தனர். அதையே ஆராய்ச்சியாளர்கள் யதார்த்த நாவல் என்றும் முற்போக்கு நாவல் என்றும் வட்டார நாவல் என்றும் பகுத்துக் கொண்டு போனார்கள்.என்னைப் பொருத்தவரை நாவல் என்பது நாவல்,அவ்வளவுதான்.அது நல்ல நாவலா இல்லையா என்பதே என் அக்கறை. நாஞ்சில் நாடன் முன்கதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 4

This gallery contains 1 photo.

தி. சுபாஷிணி நாஞ்சில் நாடரின் பயணம் திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி என திசை மாறியதால், என்னை கோவையிலேயே தங்க வைத்து விட்டார். திடீரென அழைத்து, சென்னை செல்கிறேன். அதுவும் ‘‘துரன்தோ எக்ஸ்பிரஸ்’’. இது குறிப்பிட்ட ஊரில் தான் நிற்கும். என்னுடன் வருகிறீர்களா’’ என்று கேட்டது தான் தாமதம். எதையும் சிந்திக்கவில்லை. இரயிலில் ஏறிவிட்டேன். ‘‘இன்டர்சிட்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை….8.1

This gallery contains 13 photos.

ஒன்றரை நிமிடத்துக்கு ஒருமுறை கடந்து போகும் மின்ரயில் வண்டிப் பாதையோரத்தில் குடையைப் பிடித்து முகத்தை மறைத்து மலம் கழிக்கும் வாழ்க்கை எனக்குத் தெரியும். அதற்குக் கூட வழியில்லாமல் இடைவிடாமல் மழை பொழியும் நாட்களில் வீட்டின் அங்கணத்தில் நியூஸ் பேப்பரை மடித்துப் போட்டு மலம் கழித்து, மடித்து வெளியே வீசும் பெண்களின் துயரம் எனக்குத் தெரியும். இந்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் அவர்களின் அமெரிக்க வருகை குறித்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அவர்களுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அமெரிக்காவுக்குச் சென்று வரத் தேவையான விசா வழங்கப் பட்டுள்ளது. முதலில் இந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவரது அமெரிக்க வருகையைத் திட்டமிட்டிருந்தோம். அவரது இல்லத்தில் நிகழவிருக்கும் சுப நிகழ்ச்சியை முன்னிட்டு அவர் வரும் நவம்பர் மாதம் வரை பயணம் ஏதும் மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முப்பால்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அதரப்பால் கொங்கைப்பால் யோனிப்பால் என்றனர் முப்பாலதனை மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருந்தாலும் அறம் பொருள் இன்பம் அதுவேயாமோ காதல் கரையிலாப் பரவச நிலையெனில் காமம் செப்பினால் பித்தப் பெருநிலை பேயும் நோயும் அன்றென்றான் குறுந்தொகைப் புலவன் கள்ளுங் காமமும் தனித்த பெருங்கொடை சிற்றின்பம் என்பதும் பேரின்பமாகும் மனத்தின் மெய்யின் உயிரின் சங்கமம் பறித்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வழிபாடுகளும் சடங்குகளும்

This gallery contains 10 photos.

 எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது. நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது. நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது. நாஞ்சில் நாடன் பிற பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உவமைக்கு என்ன பஞ்சம்?

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   காசற்ற பூசலார் கருத்தினில் சமைந்து விரிசடைக் கடவுட்கோர் பொற்றளி மொகலாய மன்னனின் கண்ணீரில் உயர்ந்தது யமுனைக் கரைதனில் அமரக்கோயில் தலையலங்காரம் புறப்பட்டதே என்ற கம்பனின் அருமை மைந்தன் தலை கொய்து வெட்டினார் துன்பியற் காதற்கேணி   செங்கோட்டு யாழினில் மீட்டியும் வேய்குழல் ஊதியும் ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தை தீட்டியும் திக்கெட்டும் அலைந்தார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 3

This gallery contains 6 photos.

  தமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு.  மிகையான சொற்களைப்பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.  இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நகுலன் என்றொரு மானிடன்

This gallery contains 10 photos.

என்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது. நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

காமம் செப்பாது…..முழுதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு பிரியம் பிணைப்பு கனிவு கரிசனம் யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது   காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்