This gallery contains 8 photos.
சென்ற கிழமை காலையில் வெங்கடாசலபதி விளித்தார். அப்போது அவருக்கு பின்னிராக்காலம். “ஒரு சந்தேகம்! அமாவாசைக்குத் தமிழ்ச் சொல் என்ன? எட்டாவது வாசிக்கும் என் மகள் கேட்கிறாள்!” இது உரையாடலின் சாரம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கானடாவில் வசிக்கும் சிறுமிக்குத் தோன்றியது, கல்லுக்குழியில் கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் நமக்குத் தோன்றவில்லையே என்று நாணமாகவும் இருந்தது.