This gallery contains 9 photos.
….
This gallery contains 6 photos.
உதவும் தன்மை உடையவர், உதவும் நிலையில் உள்ளவர், செல்வந்தர், அதிகாரத்தில் இருப்போர், ஆட்சியில் இருப்போரிடம் அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான உணர்ச்சி கருணை. …… நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்
This gallery contains 1 photo.
நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை … Continue reading
This gallery contains 7 photos.
அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading
This gallery contains 5 photos.
பெண்ணழகை வியப்பது, எம்மொழியிலும், எக்கலையிலும், எப் பண்பாட்டிலும், மரபு, சொற்களால், ஓவியங்களால், சிற்பங்களால், அழகு விதந்தோதப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்ணியப் போக்கின் பார்வையில் அன்றைய கலைமனத்தை புரிந்துகொள்ள முயல்வதில் சிரமங்கள் உண்டு. பெண்ணழகைப் போற்றியதை இன்றைய விடுதலை பெற்ற மனம் விரும்பவில்லை என்பதை நாமறிவோம். என்றாலும் பெண் விடுதலைப் போராளிகளால் இன்றும் திரைப்படங்களிலும், அச்சு ஊடகங்களிலும், … Continue reading
This gallery contains 4 photos.
இப்படித்தான் தமிழ் சொன்னார்கள் எம்புலவர்கள். அவர்கள் தம்மைக் கவிக்குடியரசுத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. நெருப்புடா என்றும், கொளுத்துடா என்றும், சிங்கம்டா என்றும் ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் இல்லை. சொல்லப் போனால் அவர் பெயர் போலும் அறிய மாட்டோம் நாம்!.
This gallery contains 8 photos.
சென்ற கிழமை காலையில் வெங்கடாசலபதி விளித்தார். அப்போது அவருக்கு பின்னிராக்காலம். “ஒரு சந்தேகம்! அமாவாசைக்குத் தமிழ்ச் சொல் என்ன? எட்டாவது வாசிக்கும் என் மகள் கேட்கிறாள்!” இது உரையாடலின் சாரம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கானடாவில் வசிக்கும் சிறுமிக்குத் தோன்றியது, கல்லுக்குழியில் கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் நமக்குத் தோன்றவில்லையே என்று நாணமாகவும் இருந்தது.
This gallery contains 1 photo.
எனவே சற்றே இரக்கமுடையவராய் இரும்! பழிபாவம் அஞ்சும், ஆண்டவனையும் அறத்தையும் எண்ணும்! கலப்படத்தில் ஊழலில் ஊழியத்தில் மலையில் காட்டில் மணலில் கனிமத்தில் சாராயத்தில் வைத்தியத்தில் கல்வியில் தரகில் அடித்து மாற்றியது போதுமென்று ஆறு மனமே! சற்றே தேறு மனமே! கண்மணிகாள்! உடன் பிறப்புகளே! இனமானச் சொந்தங்களே! ஒன்றை நீ நெஞ்சில் நிறுத்து! பத்தாயிரம் … Continue reading
This gallery contains 6 photos.
தமிழ் வாழ்க என உரத்தும் நீட்டியும் முழங்கியும் பேசிச் சில்லரை சேர்த்து , மொழிக்கும் இனத்துக்கும் நாமம் சாத்தியவர்களை மட்டும் தனித்து இனம் கண்டு கொண்டால் போதும். இதைக் கூறுபவன் நாமமும் நாஞ்சில் என்பேன்! …(நாஞ்சில் நாடன்)
This gallery contains 5 photos.
மண்டபத்தில் எழுதி வாங்கியவர், மடியில் இருத்தி எழுதிக் கொடுத்தைக் கொண்டு நடந்தவர், முதல் தொகுப்புக்கே முழுநாள் கருத்தரங்கம் முதல் செலவு செய்து நடத்துபவர், தத்தக்கா புத்தக்கா என்று பாடல் எழுதி விருது வாங்கி நடப்பவர் என்றெல்லாம் அந்த காலத்திலும் இருந்திருப்பார் போலும்.
This gallery contains 4 photos.
Square, சிரமம், பீடை, மலம், காடு, நீராடுதுறை, கதையில் ஒரு சந்தர்ப்பம், மோவாய் எனப் பல பொருட்கள். நாய்ப் பீயை குறிக்க நாய்க் கட்டம் எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சில அரசியல்காரர்கள் கட்டப் பஞ்சாயத்தில் பணம் சேர்த்தவர் என்பதோர் தகவல். இங்கு கட்டப் பஞ்சாயத்துக்கு என்ன பொருள் கொள்வீர்கள்??
This gallery contains 2 photos.
இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வாசிக்கும்போது சிரித்துக் கொண்டும் முடிக்கும்போது அதன் கனத்தை உணரச்செய்வதே நாஞ்சில் நாடனின் சிறப்பு. இந்தத் தொகுப்பு அந்த வகையில் மிகவும் நல்லதொரு தொகுப்பு….(ஜெயஸ்ரீ)
This gallery contains 7 photos.
இன்றோ பார்த்தீனியம் படர்ந்த குரம்பு, சீமை உடைமரங்கள் செறிந்த கரம்பு காய்ந்து வெடிப்புற்ற நிலம். தண்ணீரும் மணலும் இலாத ஆறு. சகதியும் இல்லை, மேய எருமையும் இல்லை. குடிக்க சிந்தெடிக் பால் வந்துகொண்டிருக்கிறது. வாவியோ, தடாகமோ, பொய்கையோ, நீராழியோ இன்றி செங்கழுநீர் மலர்கள் எங்கே? சாலிப் பரம்புகளில் காத்தாடி மரங்கள் பயிராகின்றன. கொக்கு கூட காண … Continue reading
This gallery contains 2 photos.
‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பாகத்தான் விடம்பனம் குறுக்கிட்டது. சற்று நேரம் யோசித்துப் பார்த்தும் திக்கும் தெரியவில்லை லெக்கும் புலப்படவில்லை. தமிழ்ச் சொல்லா, வட சொல்லா என்று பிரித்தறிய இயலா எழுத்தமைப்பு. எவரிடம் சென்று கேட்பது? தமிழாசிரியர்களிடம் … Continue reading
This gallery contains 1 photo.
அசரீரி (நாஞ்சில் நாடன்) சாவகம், புட்பகம், இமய வரம்பு எல்லாம் கடந்த எம் தாதையர் முது சொம் வேலி இல்லை, காவல் இல்லை பயிர்கள் இல்லை, விளைச்சலும் இல்லை நெருஞ்சி, அருகு, எருக்கு, குருக்கு கள்ளி, காரை, பாதாள மூலி பல்கிப் படர்ந்தன நாகம் ஊர்ந்தது, சேரை விரைந்தது அரணை, ஓணான், எலிகள் ஓடின அவயான் … Continue reading
This gallery contains 5 photos.
கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லமே வெளிப்படை. “ஒம்மாண அம்மாச்சா நிர்வாணம்” என்று சொல்லிவிடலாம். நாளிதழ்களுக்கு அறிக்கை கொடுக்கலாம், “நிரூபிக்க முடியுமா?” என்று பலரும் காண, அலுவலக மேசை மீதே பணக்கட்டுகளை வைக்கலாம். எவன் கேட்க இருக்கிறான்? எவன் எந்த ரோமத்தைப் பிடுங்கிவிட இயலும்? (…நாஞ்சில் … Continue reading
This gallery contains 10 photos.
அழகற்றது, பயனற்றது, வாழத் தகுதியற்றது என உலகில் எந்தத் தாவரமும் இல்லை. தேசியப் பறவையாக மயிலும் விலங்காகச் சிங்கமும், மலராகத் தாமரையும் மட்டுமே தகுதி உடையவை என்று இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வராகும் தகுதி, இதை வாசிக்கும் உமக்கு இல்லையா? (…….நாஞ்சில் நாடன்)
This gallery contains 9 photos.
கோடை காலங்களில் எமக்கு இன்று மதிய உணவாகக் கூழுக்குச் சிறப்பிடம். வறுத்த மோர் மிளகாய், சீனி அவரைக்காய் வத்தல், சுண்டை வத்தல், மிதக்க வத்தல், ஆகா!…..“இந்திரர் அமிழ்தம் இவைவதெனினும்” வேண்டேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கூழ் பிடிக்கும். சின்னவெங்காயம் என்று அறியப்படுகிற, அமெரிக்கர்கள் பேரல் ஆனியன் என்கிற ஈருள்ளி தோலுரித்து அரிந்து கொடுப்பது என் கைங்கார்யம்.
This gallery contains 1 photo.
சாதிச் சங்கங்கள் தத்தெடுக்கின்றன தம் படைப்பாளரை முற்போக்கு முகாமெலாம் தத்தம் உறுப்பையே முன்மொழிகின்றன மதவாத எழுத்தும் மதங்களின் அரணில் மகிமைப்படுவன நட்புக் குழாம் எலாம் தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும் உன்னத மானுடப் பண்பெலாம் பேசி கட்சித் தலைவர் காலடி மண்ணை நெற்றியில் நீறென நீளப் பூசுவர் இச்சகம் உரைக்கும் பங்குதாரரை வாராது வந்த மாமணி … Continue reading
This gallery contains 10 photos.
மதராசி கோ கிலானா முஷ்கில் ஹை! ஜாட் கோ சம்ஜானா முஷ்கில் ஹை! ஊட் கோ பிட்டானா முஷ்கில் ஹை! கண்டிப்பாக மொழி பெயர்க்க வேண்டும். தென்னிந்தியனுக்கு, அவன் பாராட்டும்படியாகச் சமைத்து அளிப்பது கடினம். ஜாட் இனத்தவருக்கு, ஒன்றை சொல்லிப் புரிய வைப்பது கடினம். ஒட்டகத்தை உட்கார வைப்பது கடினம். …………….(நாஞ்சில் நாடன்)