Category Archives: கைம்மண் அளவு

எழுத்தாளன் என்பவன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொன்றால் பாவம், தின்றால் போகும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் அவனவன் மண்ணில் விளைந்ததைத் தின்றான் மனிதன். அவனவன் காடுகளில் வேட்டையாடியதைத் தின்றான். பச்சை மாமிசம் தின்று, சுட்டுத் தின்று, இன்று தந்தூரி சிக்கனும், சிக்கன் மஞ்சூரியனும், கெண்டகி ஃப்ரைடு சிக்கனும் தின்னும் அளவுக்கு மாறி இருக்கிறான். அவனவன் மண்ணுக்குள்ளே மக்கி உரமாகியும் போனான். நாஞ்சில் நாட்டில் தென்னையும் நெல்லும் வாழையும் பயிர்கள். மானாவாரியாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

This gallery contains 2 photos.

  நாஞ்சில் நாடன் சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..?’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்கிய வசவு அவை. சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அராஜகம்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் அராஜகம் எனும் சொல், ‘ராஜ்யம்’, ‘ராஜகம்’ எனும் சொற்களின் எதிர்மறைப் பிறப்பு. ‘ஒரு தேசமானது அரசியல் அற்றிருத்தல்’ என்று பொருள் தருகிறது பேரகராதி. அதாவது, அரசியலே நடக்கவில்லை, அரசாட்சி நடக்கவில்லை என்பது பொருள். அரசாட்சி என்றால் ‘அறம் பிறழாத நல்ல ஆட்சி’ என பொருள்படும். ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்கிறது சிலப்பதிகாரம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வி ஐ பி

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் வி.ஐ.பி. என்றொரு சொல்லுண்டு புழக்கத்தில். நான் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சொல்லவில்லை. Very Important Person என்பதன் சுருக்கமான VIP பற்றிப் பேச முனைகிறேன். Important Person என்று மட்டுமே அல்ல, Very Important Person என்பது. அதாவது, மிக முக்கியமான மனிதர்; அல்லது அதி முக்கியமான மனிதர். அது ஆணாகவோ, பெண்ணாகவோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

‘கரம் பற்றுதல்’

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘கரம் பற்றுதல்’ எனில் நம் மொழியில் ‘வதுவை செய்துகொள்ளுதல்’ என்று பொருள். எளிய தமிழில் சொன்னால், திருமணம் முடித்தல். கைத்தலம் பற்றினான் என்றாலும் கரம் பிடித்தான் என்றாலும் அதுவே பொருள். நாராயணன் நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்ட அன்னவயல் புதுவை ஆண்டாள்,‘மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேயென்று – கைம்மண் அளவு 39

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காஞ்சனை’ என்று புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று. 1943ல் ‘கலைமகள்’ இதழில் வெளியான பேய்க்கதை. மிகச் சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று. அந்தக் கதையை வாசித்துவிட்டு அவரிடம் கேட்டார்களாம், ‘‘பேய், பிசாசு, பூதங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா?’’ என்று. அவர் சொன்னாராம், ‘‘நம்பிக்கை இல்லை… ஆனால் பயமாக இருக்கிறதே!’’ பேய் என்றால் எல்லோருக்குமே ஆர்வம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லுதல் யார்க்கும் எளிய

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் கைம்மண் அளவு 38 ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குடி குறித்து மறுபடியும் – கைம்மண் அளவு 37

This gallery contains 12 photos.

நாஞ்சில் நாடன் முந்திய கிழமை மதுவிலக்குக் கொள்கை பற்றி நம் கருத்தைப் பரிமாறினோம். இத்தொடர் எழுதத் துவங்கிய பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தக் கட்டுரைக்கு வாசக நண்பர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். வாழ்நாளில் ஒருமுறை கூட மோரைத் தவிர வேறெதையும் மோந்து பார்த்திராத நண்பர்கள், ‘‘நீங்கள் பகிர்ந்து கொண்டவை நியாயமான நடுநிலையான கருத்துகள்’’ என்றார்கள். அவ்வப்போதும் … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

விருது – கைம்மண் அளவு 36

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது. ‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

மது – கைம்மண் அளவு 35

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் எனக்கு வாசகர் என்று எவரும் இல்லை. எல்லோரும் நண்பர்களே! இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என! ஒருவேளை நாம் வாய் திறந்தால் மது மணம் வீசக்கூடும். சிலர் அதை மது நாற்றம் எனலாம். எமக்கதில் மறுப்பு இல்லை. நாற்றம் என்றாலும் தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

இரவல்- கைம்மண் அளவு 34

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு- ‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி? அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள்? புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா? இரவல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தரகு – கைம்மண் அளவு 33

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பத்தாண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்க வரும் வாடிக்கையாளரைச் சில சமயம் மதிய உணவுக்கு அழைத்துப் போக நேரும். சிலர் சோறேதான் வேண்டும் என்பார்கள். சிலர் பியரே போதும் என்பார்கள். சிலர் அசைவம் இல்லாமல் உண்பதில்லை என்பார்கள். சிலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பேசிச் சம்பாதிச்சது?? – கைம்மண் அளவு 32

This gallery contains 5 photos.

          நாஞ்சில் நாடன் சென்ற கட்டுரையை வாசித்து விட்டு, நான் கூட்டங்கள் பேசிப் பெரும் பொருள் ஈட்டுகிறேன் என்று நினைக்க ஏதுவுண்டு. அது வேறோர் இனம், சக்கரங்கள் மீதுலாவும் சர்க்கஸ் கம்ெபனி போல! டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்… பட்டிமண்டபங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

நம் மாணவ படைச்செருக்கு – கைம்மண் அளவு 31

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் சில ஆண்டுகளாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறேன். கோவையின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரித் தமிழ் மன்றத்தில் துவக்க உரையாற்றப் போனபோது சொன்னேன், ‘‘பெரியவர்களை இனி செதுக்கவோ, இளக்கவோ, கரைக்கவோ இயலாது. உடைக்கத்தான் முடியும். அந்த அளவுக்கு சிந்தனைப் பாறையாக உறைந்து போனவர்கள்’’ என்று. என் முன்னால் அமர்ந்திருந்த கல்லூரி தாளாளரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘தூது’ என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. செய்தி சொல்லவும் மறு செய்தி வாங்கி வரவும் தூது அனுப்பப்பட்டது. நட்பு நாட்டு, பகை நாட்டு வேந்தருக்கும், குறுநில மன்னர்களுக்கும் அரசர்கள் தூது அனுப்பினார்கள். எந்தச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்கள். ‘தூது’ என்பது தொல் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நாள்தோறும் பல சொற்கள் தமிழுக்கு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. பழைய சொற்கள் காலாவதி ஆகிக்கொண்டும்! ‘கணினி’ என்றோ, ‘முகநூல்’ என்றோ, ‘குறுஞ்செய்தி’ என்றோ சொற்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எவரும் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல் தமிழுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். காலத்தைக் கருதிக்கொண்டு எழுதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

முதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சமீபகாலமாக எதிர்பாராத நாட்களில், எதிர்பாராத நேரங்களில் எல்லாம் கோவையில் போக்குவரத்து நெருக்கடி. அது வாகனத்தில்  போவோருக்கு மட்டும்தான் என்றில்லை, எம்மைப் போல நடந்து போகிறவருக்கும்தான். அதற்கு நாம் மாநகராட்சி அதிகாரிகளை,  காவல்துறை அதிகாரிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை குற்றம் காண இயலாது. அவர்கள் அனைவருமே திறமைசாலிகள், மக்கள்  நலன் பேணுகிறவர்கள், ‘மக்கள் சேவையே மகேசன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27

நாஞ்சில் நாடன் யாவர்க்குமே பள்ளிப்பருவம் என்பது முன்பு காணக் கிடைத்த, இன்று காணாமற் போன உதகமண்டலத்துப் புல்வெளிகள் போலப் பசுமையானவை. அது குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, தேநீர்க் கடை வாசலில் ஒரு சாயா யாசகம் கேட்டு நிற்கும் பரதேசியாக இருந்தாலும் சரி, காலம் கொள்ளை கொண்டு போக இயலாத பெருஞ்செல்வம் பால்ய காலம். பள்ளிகளின் … Continue reading

Posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இரவல் தாய் மொழி- கைம்மண் அளவு 26

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் எமது பள்ளிப்பருவம் என்பது 1953 முதல் 1964 வரை. பதினோரு வகுப்புகள். பதினோராம் வகுப்பை அன்று ‘ஸ்கூல் ஃபைனல்’ என்பார்கள். எம் காலத்தில் பால்வாடி எனப்படும் பாலர் பள்ளி, ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி என்பன இல்லை. ஆங்கில A, B, C, D வரிசை எழுத்துக்கள் அறிமுகம் ஆனது ஐந்தாம் வகுப்பில். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

குப்பை உணவு- கைம்மண் அளவு 25

This gallery contains 2 photos.

 நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பெரும்பாலும் நேரடியாகச் சாப்பாடுதான் அன்று எமக்கு. நல்ல பசியும் இருக்கும். மத்தியானம் அரைவயிறு, கால்வயிறு, சோறு வடித்த கஞ்சி அல்லது பைப் தண்ணீர் என்பதால். எமக்காவது மோசமில்லை, எம்மில் சிலருக்கு பள்ளி விட்டு வந்தாலும் விளக்கு வைத்தபின் உலையேற்றி வடித்து இறக்கி, குழம்பு கொதித்த பின்தான் சாப்பாடு. சற்று … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

எது ஆபாசம்? கைம்மண் அளவு 24

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தம் ராஜபாளையம் போயிருந்தேன். முன் மாலைக்குள் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு, பின் மாலையில் என் மனம் போக்கு அலைச்சலையும் நடத்திய பிறகு, மகாத்மா காந்தி பண்டு விஜயம் செய்திருந்த நூலகத்தின் பக்கம் வந்தேன். இரவு நேரச் சிற்றுண்டியை உணவு விடுதியொன்றில் முடித்துக்கொண்டு, திரும்ப தங்கியிருந்த விடுதிக்கு நடக்கத் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்