Tag Archives: நாஞ்சில் நாடன் கட்டுரை

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

This gallery contains 12 photos.

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எம்மையும் இரங்கி அருளும்

This gallery contains 6 photos.

உதவும் தன்மை உடையவர், உதவும் நிலையில் உள்ளவர், செல்வந்தர், அதிகாரத்தில் இருப்போர், ஆட்சியில் இருப்போரிடம் அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான உணர்ச்சி கருணை. …… நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேவர் அனையர் கயவர்

This gallery contains 6 photos.

என்றாலும் பொறுக்கி என்று அறியப்படுகிற சிலரை சமூகம் கடவுள் என்றும் கொண்டாடுகிறது! கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது நமக்கு!……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி

…..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பின்னை நின்று எண்ணுதல் பிழை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

மற்றும் பலர் அல்ல

..

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரிவை கூந்தலின் நறியவும் உளவோ?

This gallery contains 1 photo.

நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

”மாரி வாய்க்க!”

This gallery contains 1 photo.

“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

செடியாய வல்வினைகள்

This gallery contains 9 photos.

தினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம்.  ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காயம்பூ

This gallery contains 1 photo.

ஆவநாழி நாஞ்சில் நாடன் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல், “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை? என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல், “படிவட்டத் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

குமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டி முதற்றே உலகு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம். அப்போது எனக்கவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முனியும் முனியும்

This gallery contains 2 photos.

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தத்து

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தக்காரும் தகவிலரும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பொலியோ பொலி!

This gallery contains 2 photos.

பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக