சாம்ராஜ் · நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading →
தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக் கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். … Continue reading →
“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading →
சுனில் கிருஷ்ணன் நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து 1, நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ … Continue reading →
கோவையிலிருந்து செயல்பட்டுவரும் “சிறுவாணி வாசகர் மையம்”2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது. 2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது” “மணல்வீடு”திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். விருதாளர் பற்றி… சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து … Continue reading →
நாஞ்சில் நாடன் இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி … Continue reading →
ஜெயமோகன் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது. ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் … Continue reading →
பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading →
கைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத் சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading →
எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் … Continue reading →
உயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய … Continue reading →
கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading →
பாரதியெனும் ஆளுமையை ஆழ்ந்து ஆழமாய் புரிந்து கொள்வதை விட உணர்ந்து கொள்வோம்.அக்னி அலையும், அருவியில் சாரலும் ஒருசேர குயிலின் ஓசையோடு, காளியின் அருளின் பெற்று பாரதியை பருகுவோம்.
.Bharathi the greatest poet of inspiration,compassion,patriotism,love,far vision and with muchmore dimension who still lives by his poems and writings reaches his 139 th birthday coming DEC 11th.vijayapathippagam cordially invites you all to catch the fire of bharathi within you.
நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading →
தினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம். ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.
முத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். … Continue reading →
ஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading →
இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading →
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.