இது நம் நாடு!

மக்களே!
குளம் தூரெடுங்கள், வீடு பெருக்குங்கள்,
சாலை செப்பனிடுங்கள், சாக்கடை தள்ளுங்கள்,
பேருந்துப் பழுது நீக்குங்கள்,
மருத்துவமனை கழுவுங்கள்,
பள்ளி இடிபாடு செப்பனிடுங்கள்,
மாணவருக்கு வகுப்பெடுங்கள்,
நெரிசலை நெரிப்படுத்துங்கள்,
இருட்டில் விளக்கேற்றுங்கள்,
இருட்டை  கண்காணியுங்கள்,
பழுதான பாலம் பராமரியுங்கள்,
கோயில் பேணுங்கள்,
கடவுள் சிலை காவல் செய்யுங்கள்,
தேங்கிக் கிடக்கும்
வழக்குகளில் தீர்ப்பெழுதுங்கள்!
அரசு என் செயும்?
களை வளர்த்து, குற்றம் பேணி
ஊழல் பயிர் செய்து, கொள்ளை அறுவடையாக்கி,
வன்புணர்வுக்கும், கொலைக்கும் வாளாது இருந்து
காப்பவர் எனும் கடமையின் கழுத்து அறுக்கும்!
இது நம் நாடு!
நாம் தானே அதன் புதல்வர்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Responses to இது நம் நாடு!

  1. natesh சொல்கிறார்:

    பெரு நகர நெரிசலில் சிக்கி மறந்த, என் மண்ணின் மொழியை, கலாச்சாரத்தை, பழைய நினைவுகளை என்னுள் கிளறி விடும் எழுத்து இது.
    நடேஷ் தாணு பிள்ளை.

பின்னூட்டமொன்றை இடுக