நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளின் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் கவிஞர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு, அவர் உரைநடை இலக்கியத்தில் செலுத்தும் தீவிரம். ‘உய்’ என்பதோர் ஊதல் ஒலி எனப் புரிந்து கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டத்தில் , ‘உய்யடா, உய்யடா, உய்!’ என்று அவரால் கட்டுரை நூல் எழுத சாத்தியமாகி இருக்கிறது.