”வீராணமங்கலத்திலே செல்லப்பன் இருந்தாம்லா?”
எந்த செல்லப்பன் என்று அவசர அடியாக நினைவுக்கு வரவில்லை. அந்த சின்ன ஊரில் ஏழு செல்லப்பன் உண்டும். நெட்டை செல்லப்பன், கட்டைச் செல்லப்பன், வெள்ளைச் செல்லப்பன், காக்கா செல்லப்பன், நொண்டிச் செல்லப்பன், மொட்டைச் செல்லப்பன், கள்ளச் செல்லப்பன் என. எந்த செல்லப்பனைச் சொல்கிறார் என யோசித்தான்.
”அதாம்போ பகவதியம்மைக்கு மாப்பிள்ளை!”
பகவதியம்மையும் எட்டு பேருண்டு. தொடுவெட்டிப் பகவதியம்மை, வெள்ளமடத்துப் பகவதியம்மை, விளாங்காட்டுப் பகவதியம்மை, பப்படக்காரி பகவதியம்மை, மட்டுப்பா வீட்டுப் பகவதியம்மை, சடைமுடி பகவதியம்மை, பால்கார பகவதியம்மை, குறிகாரி பகவதியம்மை என ஆங்கு.. (நாஞ்சில்நாடன்….)
….