புகழ்பெற்ற நடிகர் எவரும் இறந்து போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எத்தனை கோடிகள் கருப்புப் பணம் வாங்கி இருப்பார்? எத்தனை கோடிகள் வரி ஏமாற்று செய்திருப்பார்? எத்தனை ஒழுக்கக் கேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருப்பார்?. ‘அந்த நாள் இந்தியாவுக்கு இருட்டாக விடிந்தது’ என்று தலைப்புச் செய்தி போடும் நாளிதழ்கள். ‘இந்திய வானில் நேற்றிருந்த வயிரத் தாரகை இன்றில்லை’ என்று கட்டுரை எழுதும் பருவ இதழ்கள். குடியரசு தலைவர், முதன்மை அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் எல்லாம் இரங்கல் சேய்திகள் விடுப்பார்கள். வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பார்கள். தேசியக் கொடி போர்த்துவார்கள்.