அசரீரி

அசரீரி

(நாஞ்சில் நாடன்)
சாவகம், புட்பகம், இமய வரம்பு
எல்லாம் கடந்த எம்
தாதையர் முது சொம்
வேலி இல்லை, காவல் இல்லை
பயிர்கள் இல்லை, விளைச்சலும் இல்லை
நெருஞ்சி, அருகு, எருக்கு, குருக்கு
கள்ளி, காரை, பாதாள மூலி
பல்கிப் படர்ந்தன
நாகம் ஊர்ந்தது, சேரை விரைந்தது
அரணை, ஓணான், எலிகள் ஓடின
அவயான் பறித்த ஆழக் குழிகளில்
கரையான் தங்கின.
அண்டை அயலவர், வந்தவர், போனவர்
பொதுக்கழிப்பிடமாகப் புழங்கத் தொடங்கினர்
பொறுக்காடிக் கிடந்தன பழைய மலங்கள்
நாறிக்கிடந்தன புதிய மலங்கள்
மோண்டபின் பேண்டு, பேண்டபின் மோண்டு
மலக்கிடங்காயிற்று
செம் மூதாயினர் சேர்த்த எம் சொத்து
அசரீரி போல அகால ஒலித்தன
தாதையர் குரல்கள்
”மலங்கள் என்னடா கவி மயிராண்டி,
பீ எனச் சொல்லேன் பேதீல போவான்!”
(உயிர் எழுத்து)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to அசரீரி

  1. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    சமகால அநீதிகளுக்கு எதிரான உங்களுடைய குரல் மதிக்கத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s