அதிதி

நாஞ்சில் நாடன்
 கை வேலையாக இருக்கும்போது, இரண்டு வயதுப் பெண் ஜோர்ணாவை, பாக்கியம் வீட்டில் கொண்டு விட்டு விட்டுப் போய்விடுவாள் அதிதி. ஜோர்ணா என்பது வங்காளத்தில் ஓடும் நதியின் பெயர். ஜோர்ணாவும் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண்குழந்தை. பாக்கியத்தின் பிள்ளைகள் வளர்ந்து விட்டவர், பள்ளியில் வாசித்துக்கொண்டிருப்பவர். காலையில் ஏழே காலுக்குப் புறப்பட்டுப் போவார்கள். நடந்து போகும் தூரம்தான். மதியச் சாப்பாடு கொண்டுபோய்விடுவார்கள். அவர்கள் திரும்பி வர பிற்பகல் ஆகிவிடும். பூமிநாதன் காலை எட்டு மணிக்கு அலுவலகம் புறப்படுவார். இரவு திரும்பி வர அந்த நேரம் ஆகிவிடும். போகவரப் பயண நேரம் நான்கு மணிக்கூர், அதை ஒன்றும் செய்வதற்கில்லை.
 ஜோர்ணாவின் அப்பா, தாதா, சாந்தனு பொன்வேலை செய்பவர். பூமிநாதனுடன்தான்  போகும்போது பயணம். பெஸ்ட் பஸ் வந்து நின்றதும் பூமிநாதனுக்காக இருக்கை ஒன்று பிடித்து வைத்திருப்பார். எப்போதும் சாந்தனு முன்பேறாக  வந்து, வரிசையில் நின்று, பேருந்தில் மேல்மாடியில் முன் முதல் வரிசையில் இடதுபக்கச் சன்னல் இருக்கை பிடித்துக்கொள்வார். பால் கிடைக்கவில்லை, இரண்டு நாட்களாகத் தண்ணீர் வரவில்லை, சனிக்கிழமை வாஷி பாலம் பழுதுபார்க்க மூடிவிடுவார்கள் என மான்கூர்ட் ரயில் நிலையம் வரும்வரை நாற்பது நிமிடங்கள் பேசிக்கொண்டு போவார்கள்.
 மான்கூர்டில் இறங்கி, கடற்கரைப் பாதை இரயில் பிடித்து மேலும் ஐம்பது மணித்துளிகள் பயணப்பட்டு, விக்டோரியா டெர்மினசில் இறங்கி ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும் பூமிநாதனுக்கு. சாந்தனு குர்லாவில் இறங்கி மெயின் லைனில் 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அதிதி

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    எல்லா மாநில நிலவரங்களும் பம்பாய் வாழ்க்கை நிலவரமும் வருகின்றன.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s