This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன்
புதியமாதவி 1972 நவம்பர் மாதம் நாஞ்சில் மண்ணிலிருந்து எங்கள் மும்பை மண்ணுக்கு வருகிறான் ஓர் இளைஞன். மும்பைக்கு தினம் தினம் கையில் மஞ்சள் பையோடும் கண்களில் கனவுகளோடும் தாதரில் வந்திறங்கிய இளைஞர்களில் ஒருவனாகவே அவனையும் எங்கள் மும்பை அணைத்துக் கொள்கிறது. 1972 முதல் 1989 ஆகஸ்டு வரை தன் பணியின் நிமித்தம் மும்பையில் வாழ்ந்த அந்த … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் நகரப் பேருந்தில் ஏறியதும், யன்னலோர இருக்கை கிடைத்தால் நமக்கது அதிருஷ்டம். ரேஷன் கடைக்கு சாமான் வாங்கப் பையைத் தூக்கிப் போய், அங்கு நீங்கள் வாங்க விரும்பிய பச்சரிசி இருந்தால் உமக்கது அதிருஷ்டம். சீரியல் நேரத்தில் மின்சாரம் போகாதிருந்தால் அதிருஷ்டம், தாமதமாகப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தம் சேர்ந்து, உடனே பேருந்து கிடைப்பது அதிருஷ்டம். பன்னப் … Continue reading
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் தலைமையுரை தரு ஆவநாழி வழங்கும் 5 புத்தக அறிமுக விழா 14-04-2023, கோவையில்
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் ஊடகத்தார் படும் இன்னல்உரைக்க ஒண்ணாதுஅல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லைபெற்றோர் மனையாள் தம்மக்கள்தறுகண் நினைப்பில்லைஅவனன்றி ஓரணுவும் அசையாதுஎன்பது போல் எவ்விடத்தும்நீக்கமற நிறைந்திருக்கும் பணிகொங்கைஶ்ரீ உண்டது செரிக்காமல்மூன்றாம் முறை வெளிக்குப் போனால்அங்கே இருக்கணும்!தலைவனின் வைப்பாட்டி மகளின்மாமியார் ஓட்டுநர் நாக்கில் புண்ணாம்அங்கே நிற்கணும்!மந்திரி கொழுந்தியாள் நாத்தனார்அம்பலம் சென்று பொங்கல் வைத்தால்அங்கே கிடக்கணும்!ஶ்ரீகோதண்டம் மைத்துனர் விரல் நகம்பெயர்ந்து வைத்தியம் பார்க்கஅமெரிக்க … Continue reading
சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் … Continue reading
This gallery contains 2 photos.
“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம். எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. … Continue reading
This gallery contains 1 photo.
காரைக்குடி, காசி போல் புனித பூமி துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே … Continue reading
தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என ‘ஆசையெனும் நாய்கள்’ என்ற கதையைச் சுட்டலாம். இக்கதை தமிழினி வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ; வஞ்சிநாடு இதழில் ஆகஸ்ட் 1977 ல் வெளியாகியுள்ளது. தேர்த்திருவிழாவில் இளஞ்சிறார்களின் பல்வேறு ஆசையை – அரங்கேறும் பல்வேறு செயற்பாடுகளை – சூதாட்டத்தை – போதும் என்ற மனமில்லா மனித மனத்தை எனப் பல காட்சிகளை நம் கண்முன் விரியும் படி மொழியில் விவரிக்கிறார்.
தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. கிராமத்து இழவு வீட்டினைக் காட்சிப் படுத்தும் கதை. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் செயற்கைத் தனத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் நாஞ்சில் நாடன் கதையை அமைத்துள்ளார்.இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்காணொளியில் எச்சம் கதையின் ஒலி வடிவத்தை காண்கிறோம்.