எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்

தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. கிராமத்து இழவு வீட்டினைக் காட்சிப் படுத்தும் கதை. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் செயற்கைத் தனத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் நாஞ்சில் நாடன் கதையை அமைத்துள்ளார்.இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக்காணொளியில் எச்சம் கதையின் ஒலி வடிவத்தை காண்கிறோம்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக