தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- திரையில் காண்பதைத் தெருவிலும் காணலாம்!
- எவர் ஆண்டால் எலிக்கென்ன?
- தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் அறி(வு)முகம் – 6 யில் 100 வது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறப்புரை
- அதிட்டம்
- எவரெவர் கைவிடம் | நாஞ்சில் நாடன் | May 2023
- தரு ஆவநாழி ஐந்து நூல்கள் அறிமுக விழா
- அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் நாஞ்சில் நாடன் உடன் ஓர் சந்திப்பு
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,226)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜூன் 2023 (2)
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
மது – கைம்மண் அளவு 35
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கதைகளும் நாவல்களுமே எழுதிக் கொண்டிருந்தேன். கட்டுரை எழுதும் ேசாலிக்கு வந்ததெல்லாம் கி.பி 2000க்குப் பிறகுதான். இப்போது சிந்துபாத்தின் தோளில் ஏறி அமர்ந்துகொண்டு, இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் கிழவன் போலாகிவிட்டது.தொடக்க காலத்தில் நானெழுதிய கட்டுரைகளில் ஒன்று மதுப்பழக்கம் பற்றியது. தலைப்பு, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’. எனது முதல் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பும் கூட அஃதே. இதுவரை மூன்று பதிப்புகள் கண்ட நூல் அது. மேலும் இரண்டு கட்டுரைகள் எழுதினேன், மதுப்பழக்கம் பற்றி.
இன்றைய அரசியல் சூழலில் மதுவுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதினால், ‘கிறுக்கன்’ எனப் பட்டம் சூட்டி விடுவார்கள். ஏனெனில் வெகுசன மனப்போக்கு அவ்விதம் உள்ளது. ஆகவே, ஊர் ஓடும்போது நடுவில் ஓடுகிறார்கள் பலரும். பாம்பு தின்னும் நாட்டுக்குப் போனால், ‘நடுக்கண்டம் எனக்கு’ என்று சொல்லவும் வல்லவர்கள். ஆனால், எழுத்தாளன் அவ்வாறு இருக்க இயலாது. அவன் நடுப்பகலில் தீப்பந்தம் ஏந்தி மனிதனைத் தேடுகிறவன்.
குடிப்பவர்களில் வகைகள் உண்டு. எப்போதாவது அல்லது அவ்வப்போது பருகுவதை ஒரு ரசானுபவமாகச் செய்கிறவர்கள். இரண்டாவது, தினமும் குடிக்கும் குடிகாரர்கள். மூன்றாவது, குடி வெறியர்கள் அல்லது குடி நோயாளிகள். பொதுமக்கள் பார்வையில் பட்டு அவர்களைக் கவலையும் கோபமும் வெறுப்பும் அருவருப்பும் அடையச் செய்பவர்கள் இவர்கள். குடி வெறிக்கும் குடிநோய்க்கும் ஆளானவர்களை வைத்தியம் செய்து சீராக்கும் முயற்சியில் சமூகம் ஈடுபட வேண்டும்.
உலகெங்கும் வாழும் பத்து கோடித் தமிழர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். ஏனெனில், எனது கணிப்பில் பெரும்பாலான தமிழர்கள் என்ன குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும், யாருடன் குடிக்க வேண்டும் என்பதை அறிய மாட்டார்கள். பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும் என்று முழங்குகிற நாம், மதுப்பழக்கம் பற்றிய அத்தியாவசியமான புரிதலை வழங்குவதும் தேவையானதாகிறது.
இன்னொரு விடயம், நாடு முழுக்க கல்யாணக் கொண்டாட்டங்களின்போது மக்கள் குடிக்கிறார்கள், ஆடிப் பாடுகிறார்கள். ஆனால், சாவின்போது குடிப்பவன் தமிழனாகவே இருக்கிறான். பாடை கட்ட ஆரம்பிக்கும் முன்பே இங்கு மதுக்குப்பிகள் வந்து இறங்கி விடுகின்றன. பாடல் வரியொன்று சொல்கிறது, ‘தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு’ என. அந்தத் தனிக்குணம் என்ன என்பதைப் பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆம், ஆம், ஆம்! எனக்குத் திருப்பிக் கேட்கச் சில கேள்விகள் உண்டு! ‘‘ஏன் வங்காளத்தில், பஞ்சாபில் இத்தனை தீவிரத்துடன் மேற்சொன்ன காரியங்கள் நடக்கவில்லை? ஏன் பஜாரில், பேருந்து நிலையங்களை அடுத்து அங்கெல்லாம் மதுக்கடைகள் திறந்து வைக்கப்படுவதில்லை? மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு போல, ஏன் இரவு இரண்டு மணிக்கும் இங்கு மது வாங்கக் கிடைக்கிறது? எப்படி அரசு ஆணைகளின் படி காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மதுக்கடைகள் சாத்தப்பட்டிருந்தாலும் அதிக விலையில் பக்கத்து கோழிக்கடையிலும் புரோட்டா கடையிலும் குப்பிகள் கிடைக்கின்றன? எந்தக் கட்சிக்காரன் ஓட்டுக் கேட்டாலும் காசுடனும் பிரியாணியுடனும் கால் குப்பியும் எதற்காக வழங்குகிறார்கள்?’’
தமிழ்நாட்டின் தரமான மது ரசிகர்கள் கேரளத்திலும் கர்நாடகத்திலும் சென்று மது பாட்டில்கள் வாங்கி வருகிறார்கள். விலை சற்று அதிகம் என்றாலும் சரக்கு தரமானதாக இருக்குமாம். சிறுபாணாற்றுப் படை பாடிய புலவன், ‘பாம்பு வெகுண்டன்ன தேறல்’ என்கிறான். ‘நாகப்பாம்பின் சீற்றத்தை ஒத்த மது’ என்று பொருள்.
நம்மைச் சுற்றியுள்ள எந்த மாநிலத்திலும் கள்ளுக்குத் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ெதன்னங் கள், பனங் கள், ஈச்சங் கள் என்று எதுவானாலும் தடை. உயர் நீதிமன்ற ஆணை சொல்கிறது, ‘மரத்துக்கு மரம் தரக் கட்டுப்பாடு சாத்தியமில்லை’ என்று. போலி மதுக்குப்பிகளுக்கு தரச் சான்றிதழ் வழங்குவதார்? குழந்தைகள், நோயாளிகள், முதியோர் பருகும் அத்தியாவசியப் பொருளான பாலின் தரக்கட்டுப்பாடு, பசு மாட்டுக்குப் பசு மாடு செய்கிறார்களா?
கள் எனில் கிராமத்துப் பொருளாதாரம் கிராமத்துக்கு உள்ளேயே கிடக்கும். எந்தப் பன்னாட்டுமுதலாளியின் பைக்குள்ளும் அது போகாது. நமது தமிழினத்தைக் காக்கத் தலையெடுத்த அரசுகள் யாவுமே அந்நிய மதுவுக்கு நட்பாகவும் கள்ளுக்குப் பகையாகவும் இருப்பதேன்?
மதுப்பழக்கத்தை முறையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பாடுபடும் கேரள அரசு, பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தயாராகும் அந்நிய மதுக்களின் பயன்பாட்டையே நிறுத்தி விட முடியும் என்று செயல்படும் கேரள அரசு, கள்ளுக்கு எந்தக் காலத்திலும் தடை இருக்காது என்கிறது.
ராவணனுடைய கோட்டையைப் பார்த்து அனுமன் வியப்பதாகக் கம்பன் பாடல் – இதனுள் கறங்குகின்ற காற்றுப் புகாது. கதிரவனின் ஒளி புகாது. யமனின் ஆட்சி செல்லுபடியாகாது. உலகம் அழியும் காலத்து யாவும் அழிந்தாலும் அழியாத பொருள் ஒன்றுண்டு. அதன் பெயர் அறம். அந்த அறம் கூட நுழைய முடியாது. பிறகல்லவா வானவர் நுழைய முடியாது என்கிற பேச்சுக்கு வர வேண்டும்?
அவ்விதம் எங்கிருந்தும் எவ்வழியிலும் எல்லை தாண்டி மது புகுந்து விடாதபடிக்கு கோட்டை கட்டப் போகிறார்களா? தமிழ்நாட்டு ரேஷன் அரிசி கேரளத்துக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியாதவர்கள், கேரளத்தின், ஆந்திரத்தின், கர்நாடகத்தின், பாண்டிச்சேரியின் மது தமிழ்நாட்டுக்கு வர முடியாதபடி
கற்போம்…..
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.
அறம் சார்ந்த சமாச்சாரம் அல்ல. அது தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள், நன்றி
மிக நல்ல பதிவு.
மதுவைப் பற்றி சமீப காலத்தில் இவ்வளவு தெளிவான கருத்துகளை யாரும் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்கள் என எல்லாரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. அனைவரும் குடிக்கும் ஓர் அரங்கில் நாஞ்சிலுடன் இருந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதுதான் எல்லை. என்று அவர் நிறுத்தியது எனக்கு மாபெரும் வியப்பு. அப்படிப்பட்டவரால்தான் இது போன்று காய்தல் உவத்தல் அகற்றி எழுத இயலும்
மதுவிற்கு எதிராக நீங்கள் எழுதியிருக்கப் போவதில்லை என்ற முன்ணுனர்வுடனேயே இப்பதிவை படிக்கத் தொடங்கினேன். இருந்தாலும், குமட்டிக் காய் கசக்கும் எனத் தெரிந்தே உண்டிருந்தாலும், உண்டபின் முகம் சுளிப்பதைத் தவிர்க்கவியலாததைப் போல், படித்து முடித்தப் பின் மனம் சுளிவதையும் தவிர்க்க முடியவில்லை. அண்ட இயக்கத்தின் அடி நாதமான பாலுணர்வின் அடிப்படைகளை இன்றைய சமுதாய நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் நிலைகுலையாது காக்கும் பொருட்டு கல்வியாக்கும் கோரிக்கையை, மதுக்கல்வியின் தேவையுடன் ஒப்பிட்டிருப்பது அபத்தம். தங்கள் மகனுடன் சேர்த்து மகளுக்குமான கல்வியாக அது அமைக்கப்பட வேண்டுமா என்பதையும் தெளிவுபடுத்திவிடுங்கள். இருப்பினும் என்ன குடிக்க வேண்டும், எப்போது குடிக்க வேண்டும், எவ்வளவு குடிக்க வேண்டும், எப்படிக் குடிக்க வேண்டும், யாருடன் குடிக்க வேண்டும் எனும் கேள்விகளுக்கான விடையறிய ஆர்வம் எழத்தான் செய்கிறது.
நமக்கு ஊற்றிக்கொடுத்து, கர்ணம் போட்டு ஓட்டுப்போடும் குரங்குகளாக, நம்மை ஆட்டி வைக்க, இவர்களின் கைகளில் கோலாக இருப்பது இம்மதுவல்லவா? நாட்டின் பிற மாநிலங்களில் மது வெறியர்களின் எண்ணிக்கை மட்டுப்பட்டிருப்பதற்கு, அவர்கள் யாரும் இது வரை இத்தகைய கூட்டுக் கொலை சோதனைக்கு அதிகார வர்க்கத்தால் ஆட்படுத்தப்படவில்லை எனும் தங்கள் கருத்தையே நானும் வலியுறுத்துகிறேன். எந்த ஒரு சமுதாயமும் இத்தகைய பரிசோதனைகளில் மீட்சிகொள்ளும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். தமிழன் அதற்கு விதிவிலக்காகாது போனான். வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது தமிழகத்தின் இன்றைய நிலை. திரைப்படத்தின் மாய வலையில் மயங்கி நல்ல தலைவர்களைப் புறக்கணித்து சில சுயநலப் பித்தர்களின் பின் சென்ற, பொறுப்பில்லா விசிலடிச்சான் குஞ்சுகளாக செயல்பட்ட உங்கள் தலைமுரையினரையேத் தூற்றத் தோன்றுகிறது. நாங்களோ மூத்தோரின் பிழை சுமக்கும் பாபக் கன்றுகளாய்ப் பிறந்து மாய்கிறோம்.
பூரண மதுவிலக்கு என்பது எக்காலத்திலும் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை எனும் தங்களின் கருத்தையும் நான் மனமார ஆமோதிக்கிறேன். அதுபோலவே, பொய்கள் அற்ற, கொலைகள் அற்ற, திருட்டுகள் அற்ற, பெண் வன்புணர்வு கொள்ளாத உத்தம சமூகமும் என்றும் சாத்தியப்படாததே. ஆனால் அதற்காக இச்சமூகம் ஒருபோதும் அவற்றை ஒழுங்கு முறைக் கல்வி எனும் பெயரில் நெறிமுறைப் படுத்த முற்பட்டதில்லை. அவை சாத்தியமில்லாதவை என்பது தெரிந்தே காலம் காலமாக அது தன் பல முகம் கொண்டு மாறாது எதிர்த்து ஒடுக்கி வந்துள்ளது. டேங்கர் லாரிகள் வந்து ஊற்றும், காவல்துறையே கலந்து கொடுக்கும், அண்டை மாநிலங்கள் லாபத்தை அள்ளிச்செல்லும் என எத்தனைக் கேள்விகளை நீங்கள் அடுக்கினாலும், அவற்றிற்கு பதில்களேதும் எம்மிடம் இல்லை எனினும் மதுவிலக்கிற்கான இச்சமூகத்தின் குரலை மாற்ற முற்படாதீர்கள். இத்தகைய நெறிகளை செயலில் இல்லா வெற்று வார்த்தைகளாகவாவது எங்களை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல அனுமதியுங்கள்.
இரண்டு மடங்கு விலை அதிகமென்பது உங்களுக்கு வேண்டுமானால் மதுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தாது இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்தியர்களின் நிலை அதுவல்லவே.
மறைந்து நின்று அம்பெய்தி வாலியைக் கொன்ற ராமனுக்கு கம்பன் எவ்வளவுதான் வாரிசுருட்டிக் கொண்டுவந்து வக்காளத்து வாங்கி இருந்தாலும், ராமனின் மனதில் ஏதோ ஒரு மூலையில் சுயநலம் எனும் அந்த முள் தைக்கத்தானே செய்திருக்கும். இப்பதிவில் தரகு, இரவல் ஆகியப் பதிவுகளில் காணப்பட்ட தெளிவையும், உறுதியையும் மறைத்து ஒரு மெல்லிய சலனம் மேலிட்டுச் செல்வதைப் பார்க்கையில், தங்களையும் அந்த சுயநல முள் தைத்திருக்க வேண்டுமென்றே நினைக்கத் தோன்றுகிறது.
என் கருத்துகளில், வார்த்தைகளில், புரிதலில் தவறேதும் இருந்திருந்தால் இச்சிறியாளை மன்னிக்கவும். மனித மனங்களின் ஆயிரமாயிரம் ஊசிகளில், ஒன்றை மட்டும் எடுத்து உற்றுப்பார்த்து வைக்க முயற்சித்தேன். தவறுதலாக காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு என் அனுபவக் குறைவே காரணம். தங்களின் மகள் நிலை அமர்த்தி பொருத்தருள வேண்டும்.
மேலும் ஒரு சந்தேகத்தை நிவர்த்திக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். இங்கு என் கருத்திற்கு வலு சேர்க்க வள்ளுவனையும் அழைத்து வரலாம் என முயற்சித்தேன். கள்ளுண்ணாமை அதிகாரம் அறத்துப்பாலில் சேர்க்கப்பட்டிருக்கும் எனும் நினைப்பில். ஏனோ தெரியவில்லை, எம்பூட்டன் அதை பொருட்பாலில் அதுவும் நட்பியலின் கீழ் தொகுத்துள்ளான். நட்பிற்கும், கள்ளுண்ணாமைக்கும் என்ன தொடர்பென்று புரிகிலேன். ஒருவேளை இல்லறவியலில் வகைப் படுத்தி இருந்தால் கூட ஏதோ தொடர்பைக் கண்டிருப்பேன். விளக்குவீர்களா?
ய்யா அவர்களுக்கு வணக்கம். உண்ணற்க கள்ளை படித்தேன் ஆகச்சிறந்த கட்டுரை. அதை விஞ்சி நிற்கும் ” மது” தமிழ் மக்களின் உள்ளுணர்வுகளை இத்தனை நுட்பமாய் யாரும் ஆயிந்தது இல்லை என அறிகிறேன். தமிழகத்தில் மட்டும் கோவில், பேருந்து நிலைகள், முக்கிய ரஸ்தாக்கள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் மிகுந்திருக்கும் மதுச்சாலைகள் அவற்றினை உங்கள் நடை பயணத்தின் மூலமாய் கண்டு சாமானியன் படும் அவதிகளையும் நறுக்கு தெரித்தார் போல் தெரிவித்த உங்களுக்கு நன்றி.
எஸ் ஐ சுல்தான் அண்ணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஓவியம் “மருது” அய்யா அவர்களல்லவா? மாருதி என்று அச்சிடப்பட்டுள்ளதே . கவனிக்கவும்.
நன்றி
நன்றி! அருமைI
நன்று