Tag Archives: nanjilnadan

நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு!

This gallery contains 6 photos.

கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க:  https://nanjilnadan.com/category/கும்பமுனி/

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பழமொழி- கைம்மண் அளவு 20

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பழமொழி, சொலவம், சொலவடை யாவும் ஒரு தாய் மக்கள். அவை மக்கள் மொழியின் நயமும் சுவையும் ஆழமும் கூட்டுபவை. ஒன்றைச் சொல்லி, மற்றொன்றைப் புரிய வைப்பவை. விரிவான பொருளைத் தேடிப் போகப் பணிப்பதே அவற்றின் பண்பும் பயனும் ஆகும். தமிழ் இலக்கணம் பேசும் குழூஉக் குறி, இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு யாவற்றுக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

This gallery contains 2 photos.

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 .Added: January 13th, 2014 நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக இருந்து இயக்கி செல்வது கதையாடலில் அவர் பயன்படுத்தும் அங்கதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்

This gallery contains 1 photo.

by RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18

This gallery contains 5 photos.

நாஞ்சில்நாடன் அடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக..! இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

காவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் அண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது. சித்திரைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் இந்த வயதிலும் மாதம் மூவாயிரம் கிலோ மீட்டர் சராசரியாகப் பேருந்துப் பயணம் எமக்குப் பிழைப்பு. சென்னையும் சென்னை கடந்த ஊர்களும் என்றால் ரயில் மார்க்கம். நம்மையும் இலக்கியவாதி என்று எவரும் கருதினால், தூர தேசப் பயணங்களுக்கு வான்வழி. சொந்தச் செலவில் எங்கு போவதானாலும் பேருந்துதான்.  சொகுசுப் பேருந்துக்கு மாற்றாக, சற்று காசு மிச்சமாகுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு 14, துருப்பிடித்த பேரூந்துகள்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போயிருந்தேன் அண்மையில். நாகர்கோயிலா அல்லது நாகர்கோவிலா என்றொரு வழக்குண்டு இன்னமும். அதைத் தமிழறிஞர் தீர்க்கட்டும். ‘நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போவது அதிசயமா? என்னவோ சுவிட்சர்லாந்து போனதுபோல் சொல்கிறாரே’ என்பார் எமை அறிந்தார். அதுவும் சரிதான். என் 87 வயதுத் தாய் வாழும் ஊர்,  சகோதர சகோதரிகளும் சுற்றமும் வாழும் ஊர். காரணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல்

This gallery contains 2 photos.

நாஞ்சில்நாடன் திருவனந்தபுரத்தில் தம்பானூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே மிகச்சிறந்த சைவ உணவு விடுதி ஒன்றுண்டு. அங்கு செல்லும் நண்பர்களுக்கு அந்த விடுதியை முன்மொழிவேன். அந்நகரில் தங்க நேரிடும் நாட்களில் விரும்பிப் போவதுண்டு அங்கே. விலை, கோவை அல்லது சென்னை விலைகளுக்கு மாற்றுக் குறைந்ததில்லை என்றாலும் உணவின் தரம் உயர்வாக இருக்கும். நெரிசல் மிகுந்த நாட்களில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி கட்டங்கட்டமா இலக்கியமாக்குறது?

This gallery contains 1 photo.

ஆல்தோட்ட பூபதி நாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா: வெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள்.அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 12 அச்சம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன்… 38 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழத் தலைப்பட்ட பிறகு விடுமுறையில் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது, எழுத்தாளர் நகுலனை முதன்முறையாக திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். எனது எண்ணிறந்த குருக்கன்மார்களில் அவரும் ஒருவர் அவர் காலமாவது வரை அது தொடர்ந்தது. நான் திருவனந்தபுரத்தில் பெண் கட்டியதும் வசதியாகப் போய்விட்டிருந்தது. ‘அனந்தபுரம்’ என்பதைச் சொல் மாற்றி, நீல.பத்மநாபன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை

This gallery contains 13 photos.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு 11..இளைய நேயம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தேச விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் பாதி தாலுகாக்களைக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாயிற்று. இந்த மாவட்டத்துக்காரர்கள் நெடுங்காலம் ரயில் பார்த்தது சினிமாக்களில்தான். திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் போக வேண்டும், ரயிலை நேரில் பார்க்க. புகைவண்டி என்றும், தொடர்வண்டி என்றும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு..10 பாடலில் பாவம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ரசிகமணி என நேயத்துடன் விளிக்கப்படும், டி.கே.சி என்று அறியப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் இன்றிருந்தால் வயது 134. அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக  இருந்தவர் ல.ச எனப்பட்ட வித்வான் ல.சண்முகசுந்தரம். இவ்வாண்டு மார்ச் 24ம் நாள் இரவில், தமது 94வது வயதில் காலமானார். பழுத்த பழம். தமிழ் அவரை அங்ஙனம்  கனியச் செய்திருந்தது. செய்யுளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் சிறப்பிதழ்- பதாகை இணைய இதழ்

(முழுவதும் உணர்ந்த பெரியோர்களை போற்றும் நோக்கத்துடன் பதாகை நாஞ்சில் நாடனின் படைப்புலகிற்கான சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறது. தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது சிறப்பு கட்டுரை வழங்கிய எழுத்தாளர்அம்பை அவர்களுக்கும், தன் சகோதரியின் மருத்துவ சிகிச்சைகளுக்கிடையே நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் அ முத்துலிங்கத்திற்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும். நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து சிறப்பானதொரு … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – அணிந்துரை

This gallery contains 5 photos.

உண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது? கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு(9). அரிச்சந்திர கட்டம்

This gallery contains 2 photos.

அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் தொடர்புடைய மயான காண்டத்து கட்டத்தை இந்தி யில் ‘ஹரீஷ்சந்திர காட்’ என்கிறார்கள். ‘ஹரீஷ்சந்த்ர’ எனும் பெயர்ச்சொல் தமிழில் தொல்காப்பியர் அனுமதித்த தற்பவம் எனும் இலக்கணப்படி ‘அரிச்சந்திரன்’ ஆயிற்று. கட்டம் என்றால் கோடு என்றும் காட்சி என்றும் சாதாரணமாகப் பொருள் கொள்கிறோம். ஆனால், காட் எனும் வடமொழிச் சொல் தமிழாகிக் கட்டம் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாட்டத்தோடு வரும் வசந்தம்

This gallery contains 6 photos.

பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உபி முஸ்லீம்கள், மராத்தியர்கள், ஆனால் இன, சாதி தனித்துவத்தைத் தமிழனைப் போல் யாரும் கட்டிக் காப்பதில்லை. தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு. கொடிக் கம்பங்கள், படிப்பகங்கள், நிதி திரட்டல்கள்… தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் கனைத்தாலும் கட்சிக்காரன் இங்கே தண்ணீர் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பித்தப்பூ

This gallery contains 1 photo.

பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு..8, கல்லாதவன் கற்ற கவி

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர்.  ஓவியம்: மருது தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இறையும் மறையும்

This gallery contains 2 photos.

சரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இருக்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக