This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் …..
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் திருமண வீடுகளுக்குப் போனால், பரிசுப் பொருட்களை வாங்கித் தரும்படியோ, காசு-பணம்-துட்டு-மணி கவரில் போட்டுக் கொடுக்கும்படியோ நமக்கு வருமானம் போதாது. பெரும்பாலும் நம்மைக் கல்யாணத்துக்கு அழைப்பவர்கள் நம் எழுத்தோடு அறிமுகம் உடையவர்கள். மேலும் ‘அம்பட்டன் குப்பையிலே அத்தனையும் மயிரே’ என்பதை போல, நம்மிடம் இருப்பவை புத்தகங்களே! விலைமதிப்பற்ற நம் கையெழுத்து ஒன்றினைப் புத்தகத்தில் நாட்டி, … Continue reading
This gallery contains 9 photos.
ஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்” விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் … Continue reading
This gallery contains 11 photos.
இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. விழித்து … Continue reading
This gallery contains 1 photo.
‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading
This gallery contains 7 photos.
கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading
This gallery contains 7 photos.
நன்கு அறிமுகம் ஆன, கேட்டுக்கேட்டு மனது பழகிய பல கீர்த்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்துதான் இனம் கண்டுகொள்கிறேனேயன்றி, இதில் இன்னின்ன சுரங்கள் பழகி வருகின்றன, எனவே இன்ன ராகம் என்ற இலக்கணப்படி அல்ல. அதில் எனக்கு எந்தக் குறைச்சலும் இல்லை…. நாஞ்சில்நாடன்.
This gallery contains 14 photos.
சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள், சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில் திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன் நாஞ்சில் நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட … Continue reading
This gallery contains 1 photo.
’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)
This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் சில ஆண்டுகள் முன்பு, கோவையின் இலக்கிய மேடையில் சிலம்பொலி செல்லப்பனார் ஒரு சம்பவம் சொன்னார். அவரை எனது பம்பாய் நாட்களில் இருந்தே அறிவேன். அப்போது அவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராக இருந்தார். கோடை விடுமுறையில், குடும்பத்துடன் பம்பாயில் இருந்த அவரது இஸ்லாமிய நண்பர் வீட்டில் வந்து தங்குவார். … Continue reading
This gallery contains 3 photos.
நான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading
This gallery contains 1 photo.
by RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading
This gallery contains 13 photos.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading
This gallery contains 5 photos.
உண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது? கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading
This gallery contains 3 photos.
நாஞ்சில் நாடன் சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர். ஓவியம்: மருது தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ … Continue reading
தமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading
This gallery contains 1 photo.
வருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது. ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை editor@padhaakai.com என்ற முகவரிக்கு … Continue reading
This gallery contains 2 photos.
(‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்: ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘ நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்) …நாஞ்சில் நாடன் பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது எமக்கு சீலம். அரை நூற்றாண்டாக – அதாவது 18,250 நாட்களில் – தினமும் … Continue reading