This gallery contains 1 photo.
கம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா மகா கவி பாரதி அறநிலை சார்பில் 18 – 08 -2013 கோவை
This gallery contains 1 photo.
கம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா மகா கவி பாரதி அறநிலை சார்பில் 18 – 08 -2013 கோவை
This gallery contains 4 photos.
வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading
This gallery contains 1 photo.
by RV நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றிஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை: (அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து … Continue reading
This gallery contains 1 photo.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது. அ.ராமசாமி ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங் களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை … Continue reading
This gallery contains 9 photos.
புதிய புத்தகம் பேசுது- கீரனூர் ஜாகீர்ராஜா – நாஞ்சில் நாடன் நேர்காணல் தொடரும்……
This gallery contains 1 photo.
தி. சுபாஷிணி நாஞ்சில் நாடரின் பயணம் திருச்சி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி என திசை மாறியதால், என்னை கோவையிலேயே தங்க வைத்து விட்டார். திடீரென அழைத்து, சென்னை செல்கிறேன். அதுவும் ‘‘துரன்தோ எக்ஸ்பிரஸ்’’. இது குறிப்பிட்ட ஊரில் தான் நிற்கும். என்னுடன் வருகிறீர்களா’’ என்று கேட்டது தான் தாமதம். எதையும் சிந்திக்கவில்லை. இரயிலில் ஏறிவிட்டேன். ‘‘இன்டர்சிட்டி … Continue reading
மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் [24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் ஜெயமோகன் பேசியதில் சில பகுதி] நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் … Continue reading
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) இடைவெட்டு நாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, … Continue reading
நாஞ்சில் நாடன் கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் ஆசாக வீசுவதில் விறகுச் … Continue reading
ஜெயமோகன் கமண்டல நதி(1):https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ கமண்டல நதி(2): கமண்டலநதி-2 நான்காம் பகுதி தொடரும்….
ஜெயமோகன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ 2 ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் … Continue reading
கவிஞர் மகுடேசுவரன் http://kavimagudeswaran.blogspot.com/2011/02/blog-post_25.html நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி … Continue reading
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன்
”நூற்றாண்டு தமிழ் சாதனை’-சிறப்புமலர் 2000ல் நாஞ்சில் நாடனின் கட்டுரை’ எனது படைப்புலகம்’ பாகம் 1/3 2ம் பாக தொடர்ச்சிக்கு :. https://nanjilnadan.wordpress.com/2011/02/16/எனது-படைப்புலகம்-23/
நாஞ்சில் நாடன்
This gallery contains 8 photos.
”குடியரசு தின சிறப்பு சிறுகதை” எனவேதான் உயிர் பேணும் குடியை அங்கீகரித்து, குடிக்கு நன்றி தெரிவித்து எல்லா மக்களும் குடிமக்கள் என்று கருதி அரசு ஆண்டுக்கு ஒருநாள் குடியரசு தினமும் கொண்டாட விடுமுறை அளித்திருக்கிறது நாஞ்சில் நாடன் குடியரசு தின சிறப்பு சிறுகதை
This gallery contains 10 photos.
நாஞ்சில் நாடன் புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்) நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி) உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். … Continue reading
கலாப்ரியா எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள். அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் … Continue reading
பாவண்ணன் நாஞ்சில் நாடனின் படைப்புலகம் என்பது நாம் வாழும் உலகம்தான். அல்லப்படுகிறவர்கள், அவமானப்படுகிறவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், மனசாட்சியே இல்லாதவர்கள், கருணைஉள்ளம் கொண்டவர்கள் என எல்லாருமே இடம்பெற்றுள்ளார்கள். இந்த வாழ்வின் சாட்சிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தம் அடிப்படை இயல்பும் நிறமும் மாறாமல் நாஞ்சில்நாடனின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது நாஞ்சில்நாடனின் முக்கியமான பலம். எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் ஒலிக்கிற … Continue reading
(நாஞ்சில் நாடன்) முதல் பகுதி: ..https://nanjilnadan.wordpress.com/2010/12/16/முலை/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2010/12/18/முலை2/ (இன்னும் வரும்)
http://www.thiruvilaiyattam.com/2008/06/blog-post_11.html நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் … Continue reading