Tag Archives: சொல்வனம்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் பரணி பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் நந்திக் கலம்பகம் தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இது. பாடியவர் பெயர் அறியப்படவில்லை. 88 பாடல்கள் கொண்டது. அரசர்க்குத் தொண்ணூறு எனும் இலக்கணத்தைக் கொண்டு பார்த்தால், 2 பாடல்கள் இறந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அற்புதமான கடவுள் வணக்கச் செய்யுள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலம்பகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே! பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

This gallery contains 1 photo.

ந.பாஸ்கர் http://solvanam.com/?p=18831 “தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மூன்றாம் திருவந்தாதி இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம். திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் 7(1) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் சிவபெருமான் திரு அந்தாதி – 1 கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன. மாலை ஒருபால் மகிழ்ந்தானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் 6(2) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அற்புதத்திரு அந்தாதி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்காலம்மையார் யாத்தது அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆன அந்தாதி இது. இதன் பாடல் ஒன்றை அடிக்கடி நான் மேற்கோள்காட்டுவதுண்டு ‘அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல் சிவந்த வாறோ – கழலாடப் பேயோடு கானிற் பிறங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் 6(1) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அந்தாதி சிற்றிலக்கிய நூல்கள் வரிசையில் அந்தாதி சிறப்பானதோர் வகை. அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. எடுத்துக் காட்டாக, ஒரு பாடல் ‘வையத்தே’ என முடிந்தால் அடுத்த பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும் மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5A

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும்   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் கடவுளர்களை, மற்றும் மக்களுள் மாண்புற்றவர்களைக் குழவிப் பருவத்தினராக்கி, அவர்தம் இளம் பருவத்தை, சுவைபடப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்றறிந்தோம். தமிழையே பிள்ளைத் தமிழ், காதல் தமிழ், வீரத் தமிழ், தத்துவத் தமிழ், முக்தித் தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=16827 நாஞ்சில்நாடன்  மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

This gallery contains 1 photo.

solvanam.com/ நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2      பள்ளும் குறமும்   பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.   விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,  என்பது தொல்காப்பியம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

   பிற்காலத்தில் அரசியல் தலைவர்கள் மீதும் உலாக்கள் பாடப்பட்டன. காமராஜர் உலா ஒன்றிருப்பதாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பத்திருபதினாயிரம் கைவசம் இருக்குமானால், நாஞ்சில்நாடன் உலா எனவும் எழுதச் சொல்லலாம். ஆனால் தற்போதைய உலாவில் ஏழ் பருவத்துப் பெண்களின் பொது விளையாட்டு, பொழுது போக்கு, குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கும். நாஞ்சில்நாடன் தஞ்சைவாணன் கோவை மற்றுமோர் சிறந்த கோவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

செந்தமிழ்க் காப்பியங்கள்

   நாஞ்சில் நாடன் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காவல்

  நாஞ்சில் நாடன் எருக்கலம்பூச் சல்லடம் கச்சை பாய்ச்சல்கயிறு தொப்பியில் செருகிய செந்தாழைக் குறுமடல் யோக தண்டம் தாங்கிய வைரவன் முத்தாரம்மனுக்குக் காவல் ஓடியும் சுவடு வைத்து ஆடியும் வேகமாய் நடந்தும் திருநீறு பூசியும் கொடுத்தும் சடைத்த கிழட்டு வைரவன் கொண்டாடி பாதங்களில் பித்த வெடிப்பு விழுந்து கும்பிடத் தோன்றிற்று கவிதை முழுதும் படிக்க…..காவல்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

வ.ஸ்ரீநிவாசன் வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை. அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு. சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிராந்து

பிராந்து நாஞ்சில் நாடன்  எந்தக் கூட்டத்திலும் தனியனாய்த் தென்படுவார் மந்திரமூர்த்தி. ஒரு குஜராத்தி பனியா போல உடையலங்காரம். அரையில் பஞ்சகச்சம் வைத்து உடுத்த பத்து முழ வேட்டி. முழுக்கைச் சட்டை. கழுத்தில் மணிக்கட்டில் பளபளத்த பொத்தான்கள். அதன்மேல் மூடிய கழுத்துக் கறுப்புக் கோட்டு. தலையில் முன்ஷி தொப்பி. கோட்டுப் பாக்கெட்டில் செருகிய நீல, சிவப்பு நிற … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல வெங்கட் சாமிநாதன் சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருடப் பரிசை நாஞ்சில்நாடனுக்கு ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்போவதாக செய்தி வந்துள்ளது. நாஞ்சில்நாடனுக்கு நம் வாழ்த்துகள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர்தான். ஆனால் அப்படிக் கருதித்தான் சாகித்ய அகாடமி வழங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது. … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன்       சொல்வனம்  http://solvanam.com/?p=11783 அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நெடுஞ்சாலை “ நாஞ்சில்நாடன்

“நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் “நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் (பனுவல் போற்றுதும்) http://solvanam.com/?p=11249 யதார்த்த வாதம் தோற்றுவிட்டது என்றார்கள். பேராசிரியர்களாலும், திறனாய்வாளர்களாலும் இலக்கியம் அடுத்ததற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அதி நவீனப்பட்டு விட்டதாயும் நண்டு கொழுத்தால் குண்டில் கிடக்காது எனவும் வாழி பாடினார்கள். நம்பிய படைப்பாளிகளும் கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள். யதார்த்தவாதம் எழுதுகிறவர்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்