This gallery contains 1 photo.
கோமரம் நாஞ்சில் நாடன்
This gallery contains 1 photo.
சாம்ராஜ் · நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading
This gallery contains 3 photos.
நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading
கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading
This gallery contains 10 photos.
உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை, குளத்தங்கரை, வயல் வரப்புகள், திரடுகள், பொத்தைகள், குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading
This gallery contains 1 photo.
தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading
This gallery contains 1 photo.
அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading
This gallery contains 12 photos.
யானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading
This gallery contains 1 photo.
சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading
This gallery contains 13 photos.
”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading
This gallery contains 7 photos.
அந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்பு பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி எந்ற பெயருடைய எட்டு பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்? நெட்டை … Continue reading
நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading
This gallery contains 12 photos.
ஆயின 34 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன…..நாஞ்சில்நாடன் முன் … Continue reading
This gallery contains 5 photos.
நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” …..நாஞ்சில்நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் … Continue reading
This gallery contains 10 photos.
நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில்,பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்,பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத … Continue reading
This gallery contains 9 photos.
தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை … Continue reading
This gallery contains 7 photos.
“என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே. …விசு முன்கதை மாமிசப் … Continue reading
This gallery contains 9 photos.
நன்றி: ஓவியம்…மணிவர்மா அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம் அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/ தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது … Continue reading