அரசியலும் எழுத்தாளனும்

இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் தளத்திலேயே அவன் இல்லை.
பிரபலக் கலைஞர்கள், பிரபலப் பேச்சாளர்கள் மக்கள் நம்புபவற்றையே சொல்கிறார்கள். மக்கள் உண்மை என ஏற்றுக்கொண்டிருப்பவற்றையே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். சுகி சிவம் பேச்சை அல்லது சாலமன் பாப்பையா பேச்சை கேட்டுவிட்டு செல்பவனுக்கு எந்த நிலைகுலைவும் இல்லை. நாஞ்சில்நாடன் பேச்சை கேட்டுச் செல்பவன் எப்படியோ அமைதி இழக்கிறான். சீண்டப்படுகிறான், கசப்படைகிறான்.
அவர்களில் ஒருசாரார் நாஞ்சில்நாடனுடன் ஒரு விவாதத்தை தொடங்குவார்கள், அவர்களே இலக்கியவாசகர்கள் ஆகிறார்கள். எஞ்சியோர் நாஞ்சிலை வெறுப்பார்கள். அவர்களே எண்ணிக்கையில் மிகுதி.தமிழ் ஹிந்துவில் நீங்கள் கண்ட அந்தக் குறிப்பை எழுதிய பேதை அந்த பொதுமக்களில் ஒருவன். ஏன் அவன் பேதை என்றால் பொதுமக்களுக்கு ஏதோ ஒருவகையில் தாங்கள் பொதுமக்கள் எனத்தெரியும், இந்த அறிவிலிக்கு அது தெரியாது.தன்னை அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருக்கிறான்.
எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது. மதம், பண்பாடு, அரசு, அரசியல் எதையும் ‘முழுமையாக’ ஏற்றுக்கொண்டு ஒழுகுவது எந்த எழுத்தாளனுடைய இயல்பும் அல்ல. இதற்கு உலக இலக்கியத்திலேயே விதிவிலக்கு கிடையாது. நாஞ்சில்நாடன் தன் ஊர், தன் சாதி, அரசு, சைவமதம் பற்றியெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்? ஒவ்வாமையும் எள்ளலும் மட்டுமே. ஏன் அவர் வழிபடும் கம்பனைப்பற்றிக்கூட ஒவ்வாமையின் மொழி அவ்வப்போது எழுவதுண்டு.
முழுக்கட்டுரையையும் படிக்க  கீழ்கண்ட சுட்டியை அழுத்தவும்:-

அரசியலும் எழுத்தாளனும்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s