முள்மரம் கொல்க!

’இளையதாக முள்மரம் கொல்க’ என்றானே வள்ளுவ பேராசான்! திருவள்ளுவருக்குக் காவி உடுத்துவதா, உருத்திராக்கம் பூணுவதா, பூணூல் போடுவதா, அவர் சமணரா, கிறித்துவரா, மழிப்பதா, நீட்டுவதா என்பதில் மட்டும்தானே நம் கவலை! எமது பண்பாட்டுச் சிறப்பு என்று புல்லரித்துப் புளகப்பட்டு, இறவன் கோயில் எல்லாம் ஏறி இறங்கி, பிரசாதம் வாங்கி நக்குவது அன்றி நாம் கொன்ற முள்மரம் எத்தனை? ஊழல் மலிந்த அத்தனை அரசியல்காரர்களும், அதிகாரிகளும், வணிகரும், நீதிமான்களும், ஊடகக்காரரும்,  திரைத்தொழில் புரிபவரும், கல்விக்காரரும், மருத்துவக்காரரும் இன்று முள்மரங்களாக, பெருவிருட்சங்களாக மாறிச் சமூக நலன்களைத் தின்று வேரோடிச் செழிக்கவில்லையா? அவர்களுக்கு சொறிந்து கொடுப்பதுதான் நமது சமூகப் பொறுப்பா? இறை பணியா? பண்பாட்டுக் காவலா? அறங்களின் மாட்சியா??

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to முள்மரம் கொல்க!

  1. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    மிக அருமையான பதிவு

  2. venkatesan சொல்கிறார்:

    நாஞ்சில் நாடன் ஐயாவின் கட்டுரைகள் இலக்கிய நயம் கொண்டவை ,அதில் இயற்கையின் மீதும் மனுடத்தின்மீதும் அவருக்கு உள்ள அக்கறை தெரியும்,அதேசமயத்தில் அதன் மீது ஏற்படும் தாக்குதல்களையும் கண்டிப்பார். இந்த கட்டுரையும் அவ்வாறே இருக்கிறது

  3. சம்பத்குமார் சொல்கிறார்:

    நன்றி அய்யா.🙏
    படித்த பொழுதில் மகிழ்ச்சி, குற்ற உணர்வு, நெகிழ்ச்சி மற்றும் இயலாமையால் வரும் கோபம் அனைத்தும். படிக்கும்
    அறுபதை நெருங்கும் அனைவருக்கும் நிச்சயம்.🙏

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s