எனது எண்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய எம் கோபாலகிருஷ்ணன் ‘புளிமுளம்’ என்பது நாஞ்சில் நாடனின் கதாநாயகி எனக் குறிப்பிட்டார். உண்மையில் ஒருகாலத்தில் புளிமுளம் என்ற சொல் கேட்ட உடனேயே நாவூறி நிற்பேன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
மீன் குழம்பு. நாவில் நீர் ஊறுகிறது.
அருமை. நன்றி