வாசிப்பு

OLYMPUS DIGITAL CAMERA

வாசிப்பு
வாழ்நாள் எழுத்து!
பத்து தொகை நூல் வெளியீட்டரங்கம்
இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர்
புரட்சி, இமையம், சிகரம் மேடையில்
வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார்
எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ!
இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள்
சிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர்
அரும் பிறப்பெடுத்த ஆறுபேருக்கு
அன்பளிப்புப் படிகள்
வாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும்
சலுகை விலையே ஒன்பானாயிரம்
காசுப் பையில் கனமே இல்லை
செல்லாத் தாளும் இல்லை என்றிருந்தவன்
செல்லும் தாளும் சென்றவிடம் அறியான்!
அவன் எட்டாம் வரிசையின் மூத்த வாசகன்
தேசிய கீதம் இசைத்தாயிற்று
பார்த்துப் பார்த்துப் படிகள் இறங்கினான்
பதறி நடந்தான் பேருந்து நிறுத்தம்
சிறுமழை பெய்து உடைகள் நனைந்தன
கடைசி வண்டி பிடித்தே ஆகணும்!
வேடப்பட்டியோ?
வெள்ளலூரோ?
சின்னக்குயிலியோ?
தேவராய புரமோ?
(……………..நாஞ்சில் நாடன்)
(உயிர் எழுத்து ஏப்ரல் 2017)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s