இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. விழித்து இமைப்பதற்க்குள் சில நூறு கோடிகள் கொய்துவிட்டார்கள்.’கடுக்காயை தொட்டானாம், கோவணத்தை அவிழ்த்தானாம் ‘ என்ற துரிதம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. காரணம் பொத்து வரத்தா, கட்டப் பஞ்சாயத்தா என்பதை அறிவார் அறிவார், அறியார் அறியார். ………..(நாஞ்சில் நாடன்)
புலவர் ஆதி குறித்த உங்கள் பதிவு மிக அருமை , நல்ல பகிர்வு நன்றி திரு.நாஞ்சில்நாடன்