பள்ளிப் பருவத்தில்
கால் நடை
இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
மாற்றாலாகி வந்த கோவையில்
சின்னாள் 1A, 1C, 1E
நெடுநாள் 43, 43A, S-18
அதன் பின் 95, 114, 61, 23A
S-2, S-3, S-4
எதிர் வரும் காலம்
S-14, S-17, 107,3 D
இறுதி நாள் யாவ்ர்க்குமான
அமரர் ஊர்தி…
இறையே ! எம்பெருமானே !
கல்லினுள் தேரைக்கும்
அன்னம் பாலிக்கும் அருள் வள்ளலே !
எனக்கேன் இல்லை
விடை, பருந்து, வெள்ளை வாரணம்,
சிங்கம், புலி, புரவி,
குக்கல், எருமைக் கட,
மயில், மான், அன்னம்,
காகம் தத்தை என
நிரந்தரமாய் ஓர் ஊர்தி…!
………………………………………………………….நாஞ்சில் நாடன்
– See more at: http://solvanam.com/?p=37041#sthash.m3Ri4hUg.dpuf
ஊர்தி
பள்ளிப் பருவத்தில்
கால் நடை
இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
மாற்றாலாகி வந்த கோவையில்
சின்னாள் 1A, 1C, 1E
நெடுநாள் 43, 43A, S-18
அதன் பின் 95, 114, 61, 23A
S-2, S-3, S-4
எதிர் வரும் காலம்
S-14, S-17, 107,3 D
இறுதி நாள் யாவ்ர்க்குமான
அமரர் ஊர்தி…
இறையே ! எம்பெருமானே !
கல்லினுள் தேரைக்கும்
அன்னம் பாலிக்கும் அருள் வள்ளலே !
எனக்கேன் இல்லை
விடை, பருந்து, வெள்ளை வாரணம்,
சிங்கம், புலி, புரவி,
குக்கல், எருமைக் கட,
மயில், மான், அன்னம்,
காகம் தத்தை என
நிரந்தரமாய்
ஓர் ஊர்தி…!
– See more at: http://solvanam.com/?p=37041#.dpuf