ஊர்தி

 4 at 10.10.55 am
பள்ளிப் பருவத்தில்
கால் நடை
இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி
கல்லூரி போய் வர
பொடி நடையும் நகரப் பேருந்தும் –
வழித்தடம் 33
பதினெட்டு ஆண்டுகள்
பம்பாயில் மின் தொடர் வண்டி
மாற்றாலாகி வந்த கோவையில்
சின்னாள் 1A, 1C, 1E
நெடுநாள் 43, 43A, S-18
அதன் பின் 95, 114, 61, 23A
S-2, S-3, S-4
எதிர் வரும் காலம்
S-14, S-17, 107,3 D
இறுதி நாள் யாவ்ர்க்குமான
அமரர் ஊர்தி…
இறையே ! எம்பெருமானே !
கல்லினுள் தேரைக்கும்
அன்னம் பாலிக்கும் அருள் வள்ளலே !
எனக்கேன் இல்லை
விடை, பருந்து, வெள்ளை வாரணம்,
சிங்கம், புலி, புரவி,
குக்கல், எருமைக் கட,
மயில், மான், அன்னம்,
காகம் தத்தை என
நிரந்தரமாய் ஓர் ஊர்தி…!
………………………………………………………….நாஞ்சில் நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to ஊர்தி

  1. Chitra சொல்கிறார்:

    ஊர்தி
    பள்ளிப் பருவத்தில்
    கால் நடை
    இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி
    கல்லூரி போய் வர
    பொடி நடையும் நகரப் பேருந்தும் –
    வழித்தடம் 33
    பதினெட்டு ஆண்டுகள்
    பம்பாயில் மின் தொடர் வண்டி
    மாற்றாலாகி வந்த கோவையில்
    சின்னாள் 1A, 1C, 1E
    நெடுநாள் 43, 43A, S-18
    அதன் பின் 95, 114, 61, 23A
    S-2, S-3, S-4
    எதிர் வரும் காலம்
    S-14, S-17, 107,3 D
    இறுதி நாள் யாவ்ர்க்குமான
    அமரர் ஊர்தி…
    இறையே ! எம்பெருமானே !
    கல்லினுள் தேரைக்கும்
    அன்னம் பாலிக்கும் அருள் வள்ளலே !
    எனக்கேன் இல்லை
    விடை, பருந்து, வெள்ளை வாரணம்,
    சிங்கம், புலி, புரவி,
    குக்கல், எருமைக் கட,
    மயில், மான், அன்னம்,
    காகம் தத்தை என
    நிரந்தரமாய்
    ஓர் ஊர்தி…!

    – See more at: http://solvanam.com/?p=37041#.dpuf

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s