நாஞ்சில்நாடன்
கும்பமுனி: “அது சரி வே! முன்பின் நவீனத்துவ பிரம்மா! இந்தக்கதையை கொண்டுகிட்டு இப்பம் என்னத்துக்கு வந்தேரு?”
தவசிப்பிள்ளை: “எல்லாம் வெளிப்படையா பேச முடியுமா பாட்டா? படிமம்ணு ஒண்ணு நீரு கேள்விப்பட்டதில்லையா? “
கும்பமுனி: “இதுக்குள்ள எங்க ஓய் படிமம் இருக்கு? கேப்பையில நெய் வடியிண்ணா கேக்கப்பட்டவனுக்கு மதி வேண்டாமா?”
படைப்பாளி: “இந்த தெலுக்கானா-சீமாந்திரா பத்தி யோசிச்சேன் பாட்டா… எங்கூரு நடப்பு ஒண்ணு ஓர்மைக்கு வந்தது பாத்துகிடும்.”
கும்பமுனி: “அத கட்டுடைச்சி, தகவமைச்சி, அதுக்குள்ளே நுண் அரசியல் பண்ணீட்டேரா ? “
தவசிப்பிள்ளை: “இதத்தான் தும்பைவிட்டு வாலைப் புடிக்கதுண்ணு சொல்லுகது”
புலைமாடன்:” என்னத்த கதை எளுதுகானுவோ! நீ எந்திருட்டி. நாம வேற இடம் பார்ப்போம்!..