நாஞ்சில் நாடன்
(முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 )
இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில:
-
சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு
-
சௌக்கம் – பண்டங்களின் மலிவு
-
சௌக்கிதார் – பாராக்காரன்
-
சௌக்கியம் – நலம்
-
சௌகந்தி – மாணிக்க வகை, கந்தக பாஷாணம்
-
சௌகந்திகம் – வெள்ளாம்பல்
-
சௌகம் – நான்கு
-
சௌகரியம் – வசதி, மலிவு
-
சௌசன்னியம் – அன்னியோன்னியம்
-
சௌண்டி – திப்பிலி
-
சௌண்டிகன் – கள் விற்பவன்
-
சௌத்தி – சக்களத்தி
-
சௌதாயம் – வெகுமதிப் பொருள்
-
சௌந்தம் – கனிம நஞ்சு
-
சௌந்தரம் – சௌந்தரியம்
-
சௌந்தர முகம் – முகக்குறிப்பு பதினான்கினுள் மிக்க மகிழ்ச்சியைக் காட்டும் அபிநயம்
-
சௌந்தரியம் – அழகு
-
சௌந்தர்ய லகரி – ஆதிசங்கரர் இயற்றிய, வீரைக் கவிராச பண்டிதர் மொழி பெயர்த்த செய்யுள் நூல்
-
சௌந்தர்யவதி – அழகுள்ளவள்
-
சௌப்திகம் – இரவில் துயில்வோரை எதிர்த்துக் கொல்லுதல்
-
சௌபஞ்சனம் – நீர் முருங்கை
-
சௌபாக்கியம் – மிகுந்த பாக்கியம், 108 உபநிடதங்களில் ஒன்று
-
சௌபாக்கிய ரேகை – கையில் ஓடும் ஒரு ரேகை
-
சௌபாக்கியவதி – மகளிருக்கான மங்கலச் சொல்
-
சௌபானம் – படிக்கட்டு
-
சௌமன் – சந்திரன் மகன், புதன்
-
சௌமிய – 60 ஆண்டுகளில் 43-வது ஆண்டு
-
சௌமியம் – சாந்தம், அழகு
-
சௌமிய வாரம் – புதன்கிழமை
-
சௌமியன் – சாந்தமுள்ளவன், புதன், அருகன்
-
சௌரம் – 18 உபபுராணங்களில் ஒன்று, சூரியனை வழிபடும் மதம், மயிர் மழித்தல்
-
சௌராட்டிரம் – ஒரு பண் வகை. சௌராஷ்ட்ரம் – கத்தியவார் தேசம்
-
சௌரி – சனி, யமன், கர்ணன், யமுனை நதி, திருமால், சவுரி
-
சௌரியம் – களவு, வீரம், சௌகரியம்
-
சௌரு – கொச்சை நாற்றத்தோடு கூடிய சுவை – துவர்ப்பு
-
சௌல் – மகிழ்ச்சி, இடம்பம்
-
சௌலப்பியம் – சுலபமான தன்மை
-
சௌவர்ச்சலம் – உப்பு வகை உவர் நீர்
-
சௌவீரம் – 32 வைப்பு நஞ்சுகளில் ஒன்று
-
சௌஸ்தி – தருமக் கொடை
-
சௌபன்னம் – சுக்கு
ஞ கர வரிசையில், ட கர வரிசையில், ண கர வரிசையில், குறிப்பாகச் சொல்ல ஏதுமில்லை. தகர வரிசையில், ‘தௌ’வில் தொடங்கும் பதிவுகள் 26. அவற்றுள் சில.
-
தௌகித்திரன் – மகளுக்கு மகன்
-
தௌகித்திரி – மகளுக்கு மகள்
-
தௌசருமியம் – சுன்னத்து
-
தௌசாரம் – குளிர், பனி (யாழ்ப்பாண அகராதி)
-
தௌத்தியம் – தூது, ஒருத்தியைக் கூட்டிக் கொடுத்தல், pimping
-
தௌசிலம் – பளிங்கு (யாழ்ப்பாண அகராதி)
-
தௌதம் – துவைத்த ஆடை, குளித்தல், வெள்ளி
-
தௌதிகம் – முத்து
-
தௌமியன் – பாண்டவர் புரோகிதன்
-
தௌர்ப்பல்லியம் – பலவீனம்
-
தௌரிதம் – துரதம் (யாழ்ப்பாண அகராதி)
-
தௌல் – மதிப்பீடு
-
தௌலத் – தவுலத்து (அரபு)
-
தௌலேயம் – ஆமை
-
தௌவல் – கேடு
-
தௌவாரிகன் – வாயிலோன்
-
தௌவை – தவ்வை, அக்கா, மூதேவி
நகர வரிசையில், ‘நௌ’ எழுத்தில் எட்டுப் பதிவுகள். அவற்றுள் சில.
-
நௌ – மரக்கலம்
-
நௌகா – மரக்கலம்
-
நௌவி – நவ்வி, மான்
பகர வரிசையில், பௌ எழுத்துக்கு 85 பதிவுகள் லெக்சிகனில். சுவாரசியமான சில.
-
பௌட்கரம் – சைவ உப ஆகமங்களில் ஒன்று
-
பௌட்டிகம் – பூமியில் விழுமுன் தாமரை இலைகளில் ஏந்திய பசுஞ்சாணம்
-
பௌடிகம் – ரிக் வேதம்
-
பௌண்டிரம் – ஒரு தேசம்
-
பௌத்தம் – புத்த மதம்
-
பௌத்தி – மரணம்
-
பௌத்திரம் – மூலநோய், பவித்திரம்
-
பௌத்திரன் – மகனின் மகன், பவித்திரன்
-
பௌத்திரி – மகனின் மகள்
-
பௌதிகம் – கரு நெல்லி
-
பௌதிகன் – சிவன்
-
பௌமி – சீதை
-
பௌர்ணமி, பௌரணை, பௌர்ணமை, பௌர்ணிமி – நிறைமதி நாள்
-
பௌரகம் – புறநகர்ச் சோலை
-
பௌரணை – மரக்கன்று, கடல்
-
பௌரன் – நகரவாசி
-
பௌராணிகம் – பௌராணிக மதம்
-
பௌரி – பெரும் பண் வகை (பிங்கல நிகண்டு)
-
பௌரிகன் – குபேரன்
-
பௌருஷம் – ஆண் தகைமை
-
பௌலுருவி – புல்லுருவி
-
பௌலஸ்தி – சூர்ப்பணகை
-
பௌலஸ்தியன் – இராவணன், குபேரன்
-
பௌழியன் – பூழியன் என்னும் சேரமன்னன், கடவுள்
-
பௌளி – இராக வகை
-
பௌன் – பவுன்
-
பௌ கண்டம் – ஆறு முதல் பத்து வயது வரையான குழந்தைப் பருவம்.
மகர வரிசையில், ‘மௌ’ எழுத்துப் பதிவுகள் நாற்பத்தொன்று. அவற்றுள் தேர்ந்தெடுத்த சில.
-
மௌகூப் – நிறுத்தப்பட்டது (உருது)
-
மௌசானி – பெரும் பண்கள் பதினாறில் ஒன்று
-
மௌசு – கிராக்கி (உருது), மிகு பிரியம், கவர்ச்சி, ஆடம்பரம்
-
மௌட்டியம் – அறியாமை
-
மௌட்டியன் – முட்டாள்
-
மௌட்டை – முஷ்டிக் குத்து
-
மௌடி – மகுடி
-
மௌண்டிதம் – ஓர் உபநிடதம்
-
மௌண்டிதன் – தலை மழிக்கப்பட்டவன், முண்டிதன்
-
மௌத்திகம் – முத்து
-
மௌத்து – மரணம் (அரபு)
-
மௌரியர் – ஒரு பேரரசு
-
மௌல்வி – முகம்மதிய மத வித்வான் (அரபு)
-
மௌலன் – நற்குணத்தான் (யாழ்ப்பாண அகராதி)
-
மௌலானா – மௌல்வி
-
மௌலி – சடை முடி, மயிர் முடி, மணிமுடி, தலை, கோபுரச் சிகரம். ‘தாரணி மௌலி பத்தும்…’ – கம்பன்
-
மௌவல் – காட்டு மல்லிகை, முல்லை, தாமரை
-
மௌவலாரம் – சலங்கைச் சிலம்பு
-
மௌவழகன் – குதிரை வகை
-
மௌவை – ஔவை, தாய்
-
மௌனம் – பேசாமை
-
மௌனி – மௌன விரதம் பூண்டவன். மூத்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரின் புனைப் பெயர்
‘ய’ வரிசையில் ‘யௌ’ பற்றிய பதிவுகள் பன்னிரண்டு. அவற்றுள் சில.
-
யௌகிகம் – பகுபதம்
-
யௌதம் – மகளிர் கூட்டம்
-
யௌவன கண்டகம் – முகப்பரு (யாழ்ப்பாண அகராதி)
-
யௌவன தசை – வாலிபப் பிராயம்
-
யௌவனம் – இளமை, அழகு, களிப்பு
-
யௌவன லக்கணம் – அழகு, கொங்கை
-
யௌவனிகை – பதினாறு முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்.
ர கர வரிசையில், ரௌ எழுத்தில் தொடங்கும் சொற்கள் ஐந்தேதான். அவற்றுள் நான்கு.
-
ரௌத்திராகாரம் – பயங்கரத்தின் வடிவம்
-
ரௌரவம் – ஒரு நகரம்
-
ரௌத்திரி – ஆண்டு அறுபதினுள் 54-வது
-
ரௌத்திர – நவ சக்திகளில் ஒன்று
ல கர வரிசையில் ‘லௌ’ எழுத்துப் பதிவுகள் பத்து. அவற்றுள் ஆறு.
-
லௌகிக தந்திரம் – உலக வாழ்வில் சாமர்த்தியம்
-
லௌகிக தர்மம் – உலகியல்
-
லௌகிகம் – உலகியல்
-
லௌகிகன் – உலகியல் வாதி
-
லௌகீகம் – உலகிற்கு உரியது, உலகப் பற்றுடைமை, உத்தியோகம்
-
லௌகீகன் – உலகப் பற்றுடையவன்
வகர வரிசையில் ‘வௌ’ எழுத்தின் பதிவுகள் எட்டு. அவற்றுள் ஆறு.
-
வௌ – வௌவுதல், கைப்பற்றுதல்
-
வௌவால் – Bat
-
வௌவால் வலை – மீன் பிடிக்கும் வலை வரிசை
-
வௌவுதல் – கைப்பற்றுதல், திருடுதல், கவர்தல்
-
வௌவுலகம் – மரவகை
-
வௌவால் – ஒரு மீன். இந்த மீனை வாவல் எனும் பெயரில் அறிவேன்
நிறைய விபரங்கள் படித்துக் கொண்டேன். நன்றி.