இவர்கள் இலக்கியத்தில் அறம்

by 
(30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை)
…………………. நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை மேற்கொள்ளவில்லை.  அவர்கள் தங்கள் எழுத்தின் உன்னதத்தையே இலக்காக கொண்டிருக்கிறார்கள். கலங்கிய நதி, தலை கீழ் விகிதம் என்றெல்லாம் இவர்கள் படைத்தது ஏதோ நான்கு பேருக்கு பொழுது போகட்டுமே, நமக்கும் பரிசு கிடைக்கட்டுமே என்பதற்காக அல்ல. அவை, தான் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். அவர்களின் படைப்புகளை கூர்ந்து நோக்கும் பொழுது, அவை வாசகர்களின் நுண்ணுணர்வுகளுடன் உறவாடி, கலந்துறையாடி அவர்களின் வாழ்க்கையை அறம் நோக்கி திசை திருப்பும் முயற்சிகள் என்பது புலப்படும். அந்த முயற்சியின் உன்னதத்தையே தங்கள் இலக்காக கொண்டு பயணிக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இதை Excellence என்று கூறுகிறார்கள். தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்து விட்டதாக நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் மேன்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். அதாவது “Raising the Bar” என்கிறோமே-அதை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். வாசகர்களான நமக்கு இது ஒரு பெரும் கொடை. இது போன்ற படைப்பூக்கமே புதிய கதவுகளை நமக்கு திறக்கிறது. புதிய எல்லைகளை நம் முன் விரிக்கிறது. இதன் நன்மைகளை நாம் ஒரு சமுதாய சாத்தியமாக அமைத்துக் கொள்ள இலக்கிய வாசிப்பை ஒரு சமுதாயமாக வளர்த்துதெடுக்க வேண்டும்……………….
முழுக் கட்டுரையையும் படிக்க: இவர்கள் இலக்கியத்தில் அறம்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s