San Francisco Bay Area Tamil Manram (BATM)

வெங்கடேஷ் பாபு
வளைகுடா பகுதி தமிழ் மன்றம் செயற்குழு, கலிஃபோர்னியா
ஜீன் 28, 2012– சாகித்ய அகாடமி விருது பெற்று சாதனை படைத்துள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ் எழுத்தாளர் பெருமைக்குரிய திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் அமேரிக்கா வாழ் தமிழர்களுக்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற கலிஃபோர்னியாவளைகுடாப் பகுதிக்குவருகை புரிந்துள்ளார்.இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி வளைகுடா தமிழ் மன்றத்தின் செயற்குழு திரு. நாஞ்சில் நாடன் அவர்களை டப்ளின் நகரத்தில் வசிக்கும் நாஞ்சில் நாடனின் குடும்ப நண்பர் திருமதி. சித்ரா அவர்களின் இல்லத்தில் நடந்த இரவு விருந்தில் சந்தித்து மகிழ்ந்தனர்.
இந்த சந்திப்பில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி மற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் நடப்பு பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சினிமாவினால் இன்றைய இளைய சமுதாயம் எப்படி சீரழிகின்றது என்பதைப் பற்றி பல உண்மையான உதாரணங்கள் கூறி திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் வருத்தப்பட்டுக்கொண்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம் சமுதாயத்தினைப் பற்றிய பொது அறிவினைச் சொல்லிக் கொடுக்க அக்கறை காட்டுவதில்லை என்பதைக் கூறி அனைவரும் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டனர். உதாரணமாக, நம் இளைய சமுதாயத்திற்கு நமது நாட்டின் சாதாரண புளிய மரத்தின் அறிய பல நன்மைகள் பற்றி நம் சந்ததியினர்கள் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொடுத்தது போல் கூறுவதில்லை. மேலும், பொது அறிவுப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது என்று அனைவரும் வருத்துப்பட்டுக் கொண்டனர். இதனால் இளைய சமுதாயத்தின் கற்பனை வளம் குறைந்து வருவது பற்றி கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, அமேரிக்கா வாழ் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மீது மிக மோசமான தமிழ்த் திரைப்படங்களைக் காட்டி தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தவறான கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
இரவு உணவு அருந்திய பின், திரு. நாஞ்சில் நாடன் அவர்களை வளைகுடாவாழ் தமிழர்களின் சார்பாக வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் (BATM) செயற்குழு கௌரவப்படுத்தி பெருமிதம் கொண்டார்கள். மன்றத்தின் தலைவர் பிரபு சுப்பிரமணியன் சார்பாக மன்ற தலைமை பொறுப்பு ஏற்று நடத்தும் உப தலைவர் வேணு ரங்கநாதன் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சால்வை போர்த்திக் கௌரவப்படுத்தினார்.மன்றத்தின்செயற்க்குழுவினர்கள்வேணு ரங்கநாதன், இந்திரா தங்கசாமி, வெங்கடேஷ் பாபு, பாலு கிருஷ்ணராஜ், ஆறுமுகம் பேச்சிமுத்து மற்றும் முத்துக்குமார் அவர்கள் அனைவரும் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இந்த அரிய சந்திப்பை நினைவு கூறும் விதமான கல்வெட்டு பதித்த மன்றத்தின் கேடயம் ஒன்றினை நினைவுப் பரிசாக வழங்கினார்கள். பின்பு அனைவரும் திரு. நாஞ்சில் நாடனுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து விடைபெற்றுக்  கொண்டார்கள். ஒட்டுமொத்தமாக திரு. நாஞ்சில் நாடன் மற்றும்வளைகுடா தமிழ் மன்றத்தின் (BATM) செயற்குழுவின் சந்திப்பு மிகவும் இனிதாக முடிந்தது.
மேலும் புகைப்படங்களுக்கு: https://www.facebook.com/media/set/?set=a.384137514968643.81418.100001171949087&type=3&l=cd8e35b4e2

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to San Francisco Bay Area Tamil Manram (BATM)

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

  2. பிங்குபாக்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -5 « சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s