தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

நாஞ்சில் நாடன்
தக்கயாகப் பரணி
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு.
பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்களின் மருமகனும் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் இரா.குமரவேலர் அவர்களின் உரையை வெளியிடுவதாகப் பதிப்புரையில் கூறுகிறார்கள்.
உரையாசிரியர், ஒட்டக்கூத்தர் வரலாறு பற்றி விரிவான அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் சுருக்கமாகக் கீழ்வருமாறு:
ஒட்டக்கூத்தர் சீர்மிகு செங்குந்தர் மரபினர். மலரி எனும் ஊரினர். இவ்வூர் இன்று திரு எறும்பூர். கூத்தர் இவர் இயற்பெயர் என்றும் கலைமகளையும் காளியையும் வழிபட்டவர் என்றும் கலைமகள் இவர் நாவில் எழுதியதாலும் நாவால் உமிழ்ந்ததாலும் கவியாகும் வல்லமை பெற்றவர் என்றும் செய்திகள் உண்டு.
இங்கு எனக்கு இரு ஐயங்கள் உண்டு! ஒன்று, நாமும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கலாமா? இரண்டு, சமகால அரசியல்காரர்கள் நாவில் பொய்யும் வஞ்சமும் சூதும் துரோகமும் கயமையும் பேச யார் எழுதி இருப்பார்கள்?
விக்கிரம சோழனுக்கு அவைப்புலவராகவும் அவன் மகன் குமார குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவன் மகன் இரண்டாம் இராசராசனுக்கு அவைப்புலவராகவும் இருந்திருக்கிறார். இம்மூவரைப் பற்றியும் ‘மூவருலா’ பாடியவர். இம்மூவரும் கி.பி. 1118 முதல் 1163 வரை ஆண்டவர்கள்.
இராமாயணத்தின் ஏழாவது காண்டமான உத்தரகாண்டம், குலோத்துங்கன் கோவை, அண்டத்துப் பரணி, ஈட்டி எழுபத்து, குலோத்துங்கன் சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா, இராசராச சோழன் உலா, காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், தக்கயாகப் பரணி உட்படப் பல நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
இராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களையும் கம்பன் பாடினான் என்பதை நினைவுறுத்துகிறேன்.
கம்பன் ஏர் எழுபது பாடினான். இவர் ஈட்டி எழுபது பாடியுள்ளார். ஏர் எனில் கலப்பை, ஈட்டி போரில் எறிந்து கொல்லும் ஆயுதம்.
ஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. ஊடி நின்று, மணியறைக் கதவம் தாழிட்டுக் கொண்ட சோழன் தேவியை சமாதானம் செய்ய ஒட்டக்கூத்தர் போனார் என்றும் அவள் ஒட்டக்கூத்தரின் சமாதானப் பாட்டைப் பொருட்படுத்தாமல் அவரையும் கிடந்து கொண்டு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் என்பது கதை. அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் இவர் பாடல்கள் கடினமானவை, திறக்க சிரமமானவை என்பதால் அந்தப் பழமொழி வந்தது என்றும் கருதுகிறார்கள். இரண்டாவது ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது.
தம் காலத்துப் புன்கவிகள் பலரின் தலைகளை இரக்கமின்றி அறுத்தவர் ஒட்டக்கூத்தர் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரம், ‘இரண்டொன்றாய்த் தலைமுடித்து இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை’ எனும் தனிப்பாடல் வரி. இன்றும் ஒரு ஒட்டக்கூத்தன் இருந்து, மோசமாக எழுதினால் தலை வெட்டலாம் எனும் அதிகாரமும் அவனுக்கு இருக்குமானால், நாஞ்சில் நாடன் முண்டமாகவே அலைந்து கொண்டிருப்பான். என்னைத்தானே நான் சொல்ல முடியும்!
முழுக் கட்டுரையையும் படிக்க:http://solvanam.com/?p=20535

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

  1. valaiyakam சொல்கிறார்:

    வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

  2. giri சொல்கிறார்:

    நன்று

  3. gvvenkatesan சொல்கிறார்:

    அய்யா, வணக்கங்கள் பல, ஒட்டக்கூத்தரின் கவித்திறனால் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன். நான் அவர் தம் படைப்பான தக்கயாகப்பரணி நுலை வாங்க விரும்புகிறேன். கிடைக்குமிடம் தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s