தலைகீழ் விகிதங்கள் 1

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.                                                                                           ‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று……..நாஞ்சில் நாடன்

                                                                                             தொடரும்…..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to தலைகீழ் விகிதங்கள் 1

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

  2. mahigranny சொல்கிறார்:

    தலை கீழ் விகிதங்களை நான் வாசித்தஆச்சரியத்தை ரொம்ப நாளாக பகிரவேண்டும் என்ற ஆசை . 2001 இல் இங்கிலாந்தில் கவெண்ட்ரி என்னும் இடத்தில் உள்ள அரசு நூலகத்தில் ஒருவர் ஒரு முறையில் எட்டு புத்தகங்கள் எடுக்க அனுமதி உண்டு. நான் அத்தனையும் தமிழ் புத்தகமாக எடுத்தேன். நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய தலைகீழ் விகிதங்களும் அதில் ஓன்று. .தமிழ் எழுத்தை அங்கு வாசிக்க முடிந்தது இன்று வரை எனக்கு பெருமையாயும் மகிழ்ச்சியாகவும் உள்ள விஷயம் இது.

  3. Naga Sree சொல்கிறார்:

    இந்த அருமையான தொடர் வாசிக்க
    நீண்ட நாள் காத்துக்கொண்டிருந்தேன்
    மிக்க நன்றி!

  4. sattanathan07 சொல்கிறார்:

    உங்கள் சேவைக்கு நன்றி . மிகவும் எதிர்பார்த்திருந்த நாவல் .

  5. Sakthivel சொல்கிறார்:

    இந்த நாவல் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் கொண்ட திருமண பந்தத்தில் சிக்குண்டு திருமணமான என்னுடைய ஆரம்ப நாட்களை நினைவு கூர்வது போலவே இருந்து. என்னால் என்னை சிவதாணு என்ற சித்தரிப்பிலிருந்து விடுவிக்கவே முடியவில்லை. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்ததை என் மனக்கண் முன்பாக கொண்டு வந்தே விட்டிருந்தது. அந்த தவிப்பும் வேதனையுற்ற அந்த நாட்களும் மிக மிக நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கியிருந்தீர்கள் அய்யா. மற்றும் ராஜநாராயணமங்கலம் புதுகிராமம் சுசீந்திரம் பழையாறு என்று எல்லா பகுதிகளிலும் வாழ்ந்தது போன்ற ஒரு பிரம்மை எனக்கு வந்ததாக உணர்கிறேன். உங்களின் மற்ற எல்லா படைப்புகளையும் படிக்கும் ஆவல் எனக்கு ஏற்பட்டிருப்பது உண்மை. நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s