http://news.vikatan.com/index.php?nid=6000
‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’.
சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, நிதானமாக எழுதித் தந்த பட்டியல் இது…
1. அறம் – ஜெயமோகன்
2. காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்
3. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
4. ஆழிசூழ் உலகு – ஜேடிகுரூஸ்
5. வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்
6. தாயார் சந்நிதி – சுகா
7. கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
8. ஆறாவடு – சயந்தன்
9. போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்
10. அசடன் – தாஸ்தாவஸ்கி
அருமையான தேர்வு.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஐயா.
நாஞ்சிலின் பட்டியலில் உள்ள புத்தகங்களில் மூன்றுதான் வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்க வேண்டியிருக்கிறது. காவல்கோட்டம் சாகித்யஅகாடமி பரிசு வென்றது மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி.