பாலம் கதை குறித்து- ஜெயமோகன் சொல்புதிது குரூப்பில்

https://groups.google.com/forum/#!topic/solputhithu/G4JHu5-tkOg
 
மறுபடியும் மோதிரக் கையால் குட்டுப்படும் நேரம்:  பாலம் கதையின் முடிவு புரியவில்லை!  நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன.
பாலா.

V Bala
 
 …………………..
1.         பெரிய அளவில் விடாப்பிடியாக நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பவர்கள்- அவர்கள் பக்கம் இறங்கி வர ஒரு காரணத்தை மனம் தேடிக் கொண்டிருக்கும். அதுவும் பெரியவர் – சற்றுத் தணிவான குரலில் சொன்னதாலும் இருக்கலாம்.
2.       அத்தனை பேர் சொல்லியும் கேட்காதவர்கள் தான் சொன்னவுடன் கேட்டவுடன் காரினருக்கு சற்று நியாயம் செய்ய இருக்கச்சொல்லி  ஊர்ர்காரர்களுக்கு சமாதானம் செய்ய தான் இருப்பதாகவும்   சொல்லி இருக்கலாம்.
நான் எளிய புரிதலுடன் சொல்லி இருக்கிறேன். திறப்புகள் இருப்பின் நானும் தெரிந்து கொள்ள ஆவல்
 
சித்தனாத பூபதி
 
………………… 
 
ஈஸ்வரமூர்த்திப் பாட்டா நியாய அநியாயத்தின் நடுவில் ஒரு கணம் பாலம் ஆகிறார். அது  ஞானத்தின் பாலம். அந்த பாலம் இல்லை என்றால் அழிவுகள் நிச்சயம். மனித மனம் ? நியாயம், நாகரிகம், கள்ளமின்மை   போன்றவற்றை கண்டு கொண்ட, மீண்டும் மீண்டும் கொள்கிற தருணம். எப்போது எங்கிருந்து மனிதன் அவற்றை  கற்று கொண்டு அதை அடுத்த தலை  முறைக்கு கொண்டு செல்கிறான் ? சிவன் போக்கு சித்தன் போக்கா ?
 
கதையின் கடைசி தருணங்கள் உக்கிரமானவை, மெல்லியவை. பாட்டா தலைமுறைகள் கடந்தவர்.  கார்காரர் பாட்டாவிடம்  இது என்ன நியாயம் பெரியவரே என்று கேட்டு ஒரு கணம் ஏமாறுவது  மிக உக்கிரமான  தருணம்.   எல்லோரும் போங்கோ  என்று பாட்டா சொல் கேட்டு மெதுவாக களைந்து செல்பவர்கள்.  நான் கொஞ்ச நேரம்  பேசீட்டு இருந்துட்டு வாறேன் என்று பாட்டா சொல்வது. அந்த கணங்களில்  நிலவு மேலும் சொரியும். என் கண்களும் லேசாக கலங்கின. 
 
அன்புடன், 
ராஜா

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s