நகை

நாஞ்சில் நாடன்
 
உன் பங்கைப் பெற்றாய் நண்பா!
வழக்கில்லை வயிறெரிவும் இல்லை
மற்று ஆயிரம் பங்கும்
அள்ளிக் கொண்டாய்
அநீதி பேராசை தன்னலம்
குற்றம் வஞ்சம்
எனப்பல‌
சொற்கள் குறித்தது பேரகாதி
 
அதுவல்ல எமதிழிவு
ஒத்தாரையும் மிக்காரையும்
உனைத்
துதிக்கச் சொன்னாய்
கூர்மதி போற்றல்
தியாகம்
தழும்பு
விழுப்புண் விழாதபுண்
என மாற்றுப் பெயரணிந்தாய்
 
தனக்கெனக்
கோடிப்பங்கு குவித்தவர்
காற்செருப்பை
நாணமின்றி நக்கினாய்
 
செருப்பில் பட்ட எச்சில்
துடைக்கக் கண்டும்
செம்மாந்து நடந்தாய்
 
மேலங்கியில் ஒளிந்திருந்த‌
துவக்கை அஞ்சுவதாய்
கர்வம் கொண்டாய் நண்ப!
 
அச்சமல்ல‌
மலம் மிதித்து நிற்பதாய‌
அருவருப்பு
 
பறிபோன நூறாயிரம் கோடிப்
பங்குக் கானவர்
உயிர் சுமந்து
துவக்குகளின் குருட்டுக்
கண்களுக்கு அஞ்சிக்
கிடப்பது அஞ்சிக்
கிடப்பது காணத்
தகிக்கிறது
 
காலம் கடந்தும்
மண்ணில் கிடந்தவர்
கனவும் இலாதவர்
 
அவர் 
வெயில் கருகி நின்றார்
என உருகி 
நீர்மோர் வழங்கிய‌
வள்ளலாய் இருந்தாய்
மக்கட்கு மூக்குச் சிந்தினாய்
 
வள்ளல் எனும் பிம்பம்
யாசித்து
நகைத்தாய்
 
நண்ப!
 
நாட்பட்டழுகிய சவத்தின்
கழுத்து மாலையென‌
மணத்தது
உன் நகைப்பு.
 
………………………..
 
 
தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நகை

  1. இராதெ முத்து சொல்கிறார்:

    தீதும் நன்றும் கவிதையின் சொற்கள் ஒன்று மற்றொன்றாய் பிரிந்து, உள்ளூரிலிருந்து உலகளாவிய தளத்தில் காலூன்றி, இழிவு பாசங்கு தனப் பாம்பின் சட்டையை உரித்து ,ஊழித்தாண்டவம் புரிகிறது

    • R Rajendran சொல்கிறார்:

      கவிதை வரிகள் அழகு மிக அழகு அதன் அர்த்தம் ஆழம் மிக ஆழம். பெருகட்டும் மேலும் பெருகட்டும். வணக்கம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s