கமண்டல நதி 9

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. அவரது புனைவுலகில் இந்தப் பெண் கதாபாத்திரம் எப்படியெல்லாம் பரிணாமம் கொண்டிருக்கிறது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. சதுரங்கக் குதிரையில் ‘பார்வதி’ அவள்தான். கதாநாயகன் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். சொத்துக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு அதன் நரக வேதனையை அனுபவிக்கிறான். ‘சதுரங்கக் குதிரை’யில் வரும் காமாட்சி அவள்தான். கதாநாயகனால் அவளை மணக்கவே முடியவில்லை. மிஞ்சின வாழ்நாள் முழுக்க அவளை எண்ணி அவள் இடத்தில் பிறிது ஒரு பெண்ணை வைக்கமுடியாமல்  நொந்து வாழ்கிறான். ‘எட்டுத் திக்கும் மதயானை’யின் செண்பகமும் அவள்தான். அவளை அவன் தீண்டக்கூட இல்லை. மனதால்கூட. ஆனால் எங்கோ எப்போதோ ஆத்மா அவளைத் தீண்டியிருக்கிறது. விளைவாக ஊரைவிட்டே துரத்தப்படுகிறான். எட்டுத் திசையிலும் மரணம் மிரட்ட அலைந்து திரிகிறான்
ஜெயமோகன்
முன் பகுதிகள்:கமண்டல நதி
இன்னும் வரும்……

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s