நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்

கோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த நுண்கலைகளையும் வெகுஜனக் கலைகளையும் பார்ப்பனக் கலைகள் என்று கூறிய துஷ்பிரச்சாரமும் வெறுப்பேற்றலும் நடைபெற்றது என்பது இன்று வரலாறு என்று வருத்தப்படுகிறார். …(தி.சுபாஷினி)
நாஞ்சில் நாடன்
முன்பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
தொடரும்…..
 
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்

  1. nathnavel சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    புதிய விபரங்கள் கொட்டுகின்றன.
    காலங்கள் மாறுகின்றன. வருத்தமாகத் தான் இருக்கிறது.
    நன்றி ஐயா.

  2. bala சொல்கிறார்:

    நுண்கலைகள் கைவிட்டுப் போனதற்கு திராவிடப் பிரச்சாரம் மட்டுமே காரணமல்ல. நிலப் பிரபுத்துவக் காலகட்டம் மறைந்து, அரசும், பொருளாதாரமும், முதலாளித்துவமும், உலகமயமாக்கலும் கிராமத்தைத் தட்டும்போது, ராப்பாடிகளும், கூத்தாடிகளும் மறைவதும் ஒரு இயல்பான நிகழ்வே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாரதம் முழுதும் நடந்து வரும் நிகழ்வே. உ.பி, பீஹாரில் இருந்து மட்டும் 2-3 கோடி மக்கள் இந்தியாவெங்கும் புலம் பெயர்ந்துள்ளார்கள். அங்கே இருந்த கலைகளும் அழிந்து கொண்டுதான் இருக்கின்றன. பழையன கழிதல் இயல்பே.. நீங்களும் நானுமே அவ்வாறுதானே. ஒரு மேலாண்மை டிகிரி முடித்ததும் மாதம் 1 லட்சம் சம்பாதிக்க முடியும் போது, வயலில் உழுது கொண்டு, கூத்து பாத்துக் கொண்டு, ராப்பாடிகளுக்குத் தானியம் போட்டுக் கொண்டு இருப்பது லாபமல்ல என்றுதானே வெளியேறினோம்? நான் அவ்வாறுதான் வெளியேறினேன்.

  3. senthil சொல்கிறார்:

    When i was in 5th or 6th std use to hear one blind person was to use sing & walk.Pepole guided him
    to go stright & railway crossing,also use to see pavaikuthuu,cinema in our steet itself on big screen.
    Once i comleted my studies i was myself forced to work somewhere like mumbai,banglore, hydrabad & now in Gulf Whenever i am reading like this always thinking back my childhood.

  4. judiee சொல்கிறார்:

    ஜயா.இது புத்தகமாக உள்ளதா???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s