எனது நாவல் அனுபவங்கள்

 
நாஞ்சில் நாடன்

 
 பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி. அசலைச் சொன்னால் அருவருத்துப் போவீர்கள். அசலை அப்படியே சொல்வதும் படைப்பல்ல.
           ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது. இன்னொன்றும் புரிந்தது – நாஞ்சில் நாட்டுத் தளத்தை நீங்கும்போது இயல்பான சுகத்துடன் என்னால் அனுபவித்து எழுத முடியவில்லை என்பது. ஆனால் நல்ல நாவலாசிரியனுக்கு எந்தத் தளத்திலும், பின்னணியிலும் இயங்க முடியவேண்டும் என்பது எனக்குத் தெரியும். 
           இந்த நான்கு நாவல்களிலும் கலைவெற்றியை நான் அடைந்திருக்கிறேன் என்று நிச்சயமாகச் சொல்லமாட்டேன். ஆனால் நாஞ்சில் நாட்டை நான் அறிந்து அனுபவித்த விதத்தில் சரியாகப் பதிவு செய்துள்ளேன் என்ற திருப்தி இருக்கிறது.
           நான் ஒன்றி வாழ்ந்த காலம் கை நழுவிப் போய்விட்டது. என் மொழி சினிமாவினாலும் வியாபாரப் பத்திரிக்கைகளாலும் அறையுண்டு அறையுண்டு தீவிரமாகச் சாயம் போகத் தொடங்கி விட்டது. கை வைத்தியம், சமையல், சடங்குகள், பண்டிகைகள், வழிபாடுகள், கலைக்கூறுகள் என பண்பாட்டின் பகுதிகள் எல்லாம் தேய்ந்து போய்விட்டன. மிச்சமிருப்பவைகூட இன்னும் இருபது ஆண்டுகளில் காணாமற் போய்விடக்கூடும். என்றாலும் நாஞ்சில் நாடன் பதிவு செய்தவை இருக்கும் என்ற திருப்தி இருக்கிறது. திருப்தியின் ஊடேயே இன்னும் பதிவு செய்யாமல் விடுபட்டுப் போனவை மீது ஆற்றாமை, இவையெல்லாம் ஒரு படைப்பிலக்கியவாதியின் வேலை இல்லை என்றாலும் கூட.  ஆனால் ஒரு பகுதியையேனும் பதிவு செய்ய முடிந்ததில் எனக்கு பெருமை உண்டு.
           எனது முதல் மூன்று நால்வல்களில் சற்று பிரச்சார நெடி அடிக்கிறது என்றும் நான் மேம்போக்கான முற்போக்குவாதி என்றும் விமர்சகர்கள் எழுதியபோது எனக்கு ஆத்திரம் வந்தது. ஒரு படைப்பில் இந்தக் குறைபாடு இருக்கக்கூடாது என்பதை நான் பிற்பாடு புரிந்துகொண்டேன். கலையின் பண்பு, பயன் பற்றி எல்லாம் தீர்மானமான கொள்கை எனக்கு இருந்த போதிலும், படைப்பில் அது
தட்டச்சு உதவி: பிரவீன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எனது நாவல் அனுபவங்கள்

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு.

  2. ஜெகதீஷ் குமார் சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனின் தன் படைப்புகள் மீதான திருப்தியின்மை அவரிடமிருந்து மற்றுமொரு உன்னதமான படைப்பை வெளிக்கொணரும் என்று நம்புகிறேன்

ஜெகதீஷ் குமார் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s