ஒரு காலைக் காட்சி

நாஞ்சில் நாடன்
 
சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச் சுழற்றிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தன. அலுவல் நிமித்தம் செல்லும் மக்கள் பெருங்கூட்டம் சகலவிதமான வாகனங்களிலுமாக விரைந்து கொண்டிருந்தன. பச்சை, மஞ்சள், சிகப்புகள் மாறி மாறி விழுந்தன. தலைக்கு மேலோடும் பாலத்தில் ரயில் பெட்டிகள் தடதடத்தன.
 
பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அறுமுனைச் சந்தியை நெருங்கிக்கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து அவனுக்கு மேலும் பத்துபன்னிரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். மே மாதப் பொரிவில் ஏற்கனவே கைக்குட்டை நனைந்துவிட்டது. சிறிய டர்க்கித் துண்டு வைத்துக் கொள்ளலாம் என்றால், வாரச் சந்தையில் வட்டிக்குக் கடன் கொடுப்பவன் பை போலப் பெரிதாக வைத்துக்கொள்ள வேண்டும். துடைத்துத் துடைத்து, பாக்கெட்டில் திணித்து, இன்னும் சற்று நேரத்தில் கார நெடியோன்று எழும்.
 
செல்ல நேரிடும் வசதியானதோர் அலுவலகத்தில் முகம் கழுவித் தண்ணீர் குடித்த கையோடு கைக்குட்டையையும் அலசிப் பிழிந்து கொள்ள வேண்டும்.
 
சில அலுவலகங்கள் எல்லா வசதிகளுடனும் இருந்தன. வரவேற்பறை குளிரூட்டப்பட்டு, வசதியான சோபாக்கள் போடப்பட்டு, பெரிய புகழ் பெற்ற ஓவியர்களின் நகல் ஓவியங்கள் மாட்டப்பட்டு இருக்கும். மூத்திரம் பெய்ய நேரிடும் கோப்பைகளில் நாப்தலீன் உருண்டைகள் சுழன்றன. கை கழுவும் கோப்பை அருகே திரவ சோப்பு இருந்தது. சில அலுவலகங்களில் ஈரக்கை உலரக் காற்று வீசும் கருவிகள் கூட இருந்தன. வேறு சில அலுவலகங்களில் கை கழுவும் தண்ணீருக்காக குழாயைத் திருக வேண்டிய உழைப்பு இல்லை. குழாயின் கீழே கையைக் காட்டினாலே கூடப் போதும். ‘கொடக்’கென இளநீர் உடைத்தாற் போன்று தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்.
 
வேலை நெருக்கடியில் சில சமயம் மூத்திரம் பெய்ய மறந்து போனால் சந்திப்புகளில் பஸ்ஸூக்கு காத்திருக்கும் நேரங்களில் மூத்திரம் முட்டும். கனத்த நிறங்களில் பளிங்கு ஓடுகள் பாவிய சுவர்களுடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஒரு காலைக் காட்சி

  1. Rajan சொல்கிறார்:

    உள்ளத்தை தொட்ட சுடும் நிஜம். பதிவிற்கு நன்றி.

  2. Magi சொல்கிறார்:

    என்ன அழ வச்சுப்புடீரே நாஞ்சில் ஐயா!!!

  3. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    முடிவு மனசு கலங்க வைக்கிறது.
    நன்றி ஐயா.

  4. தினமும் காலையில் சைக்கிளில் பயணிக்கும் என்னை மதுரை வெயில் சுட்டு எடுத்துடும். இக்கதையில் வருவது போல ஒரு துண்டு தான் இனி எடுத்துட்டு வரணும்ன்ணு தினமும் நினைப்பேன். இக்கதையின் இறுதிக்காட்சியை நம்ம ஆட்சியாளர்கள் பார்த்திருந்தால் எங்கள் ஆட்சியில் பாலாறு ஓடுகிறது என பெருமையாய் கூறியிருப்பார்கள். அருமையான பதிவு.

  5. வல்லம் தமிழ் சொல்கிறார்:

    இது காலைக்காட்சி மட்டுமல்ல,காலக்கண்ணாடியும் கூட…

  6. karthikeyan சொல்கிறார்:

    மனம் நெகிழ்ந்தேன். – கார்த்திகேயன்.

Rajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s