அன்புள்ள நண்பருக்கு ..,
வணக்கம், என் பெயர் நல்லசிவம், ஜெயமோகன் அவர்களின் வாசகன் ; அவர் மூலியமாக நாஞ்சில் நாடன் அவர்களின் கதையுலகு அறிமுகமாகியது. நேற்று உப்பு கதையை வாசித்தேன். இறுதி கணங்கள் சில துளிகளை வரவளைத்து விட்டன. மேற்கொண்டு சில கணங்கள் இறந்த காலத்தை நினைவு கூர்ந்து அமைதியாகும் படி;; இத்துடன் அந்த கதையை மிகுந்த விருப்பமுடன் டைப் செய்து அனுப்பி உள்ளேன்
dinesh nallasivam
வளர்த்த பாட்டி
மரித்து
அறிந்த சோகம்
அறியாத ரசம்
கலை நுனுக்கம்
மொழி இணக்கம்
கைவந்த நாஞ்சில் நாடன்
பானை உப்பில்
தொடங்கி
கண்ணீர் உப்பில்
முடிந்த ”உப்பு” சிறு கதை.
அளந்தெடுத்த சம்பவக்
கோப்பு
அடிக் கரும்பாய்
அடுக்கிய ஈர்ப்பு !
நீரோட்ட நடை
வார்ப்பு
நினை வூட்டு அலைகள்
மீட்பு
படிப்பவரைப் பிடிக்கும்
படையல்