நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்

பாவண்ணன்

நாஞ்சில் நாடனின் படைப்புலகம் என்பது நாம் வாழும் உலகம்தான். அல்லப்படுகிறவர்கள், அவமானப்படுகிறவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், மனசாட்சியே இல்லாதவர்கள், கருணைஉள்ளம் கொண்டவர்கள் என எல்லாருமே இடம்பெற்றுள்ளார்கள். இந்த வாழ்வின் சாட்சிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தம் அடிப்படை இயல்பும் நிறமும் மாறாமல் நாஞ்சில்நாடனின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது நாஞ்சில்நாடனின் முக்கியமான பலம். எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் ஒலிக்கிற ஒரு விமர்சனக்குரல் நாஞ்சில்நாடனின் மற்றொரு பலம். கண்காணிப்புக்குரலாக, கண்டிப்புக்குரலாக, எச்சரிக்கைக்குரலாக. கிண்டல்குரலாக, விமர்சனக்குரலாக இது எங்கெங்கும் ஒலித்தபடி உள்ளது. சில சமயங்களில் படைப்பின் எல்லையைத் தாண்டி இக்குரல்கள் ஒலித்தாலும் இக்குரல்களின் அடிநாதமாக உள்ள நியாய உணர்வும் நேர்மையும் அந்த விலகலை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றன.
புனைவுலகில் சாடைமாடையாகத் தொடுகிற அம்சங்களை நாஞ்சில் நாடன் தன் கட்டுரைகளில் மிகவிரிவாகப் பேசுகிறார். அவர் பேசாத தலைப்பே இல்லை என்று சொல்லலாம். ஆண்உலகம், பெண்உலகம், முதியோர் உலகம், குழந்தைகள் உலகம் என எல்லா உலகங்களிடையேயும் அவர் காற்றைப்போல புகுந்து வெளிப்படுகிறார். நமக்கு கவனப்படுத்த அவரிடம் எப்போதும் ஒரு விஷயம் எஞ்சியிருந்தபடியே உள்ளது.
கட்டுரையை முழுதும் படிக்க:- http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_nanjil_sahithya_2.php

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s