This gallery contains 5 photos.
நாஞ்சில் நாடன் முன் கதை; கான் சாகிப் (1) கான் சாகிப்(3)
நாஞ்சில் நாடன் (‘அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ! இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!’) ஆனந்த விகடன் புகைப்படம்:- nellaieruvadi.com எஸ் ஐ சுல்தான்
நாஞ்சில் நாடன் பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. … Continue reading
நாஞ்சில் நாடன் நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் … Continue reading
இந்த வாரம் : நாஞ்சில் நாடன் வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம். … Continue reading
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார். ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading
நாஞ்சில் நாடன் 0
புலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். … Continue reading
நாஞ்சில் நாடன் ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலை கொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு.மற்றபடி கிறிஸ்துவின்,என்று நீ அன்று நான் உன் எதிரி அல்லவோ எனும் நிரந்தரமான எதிரியான சாத்தானின் கோயில் எனப் … Continue reading
நாஞ்சில் நாடன் சிங் எனும் துணைப்பெயர் கொண்டவரெல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னை நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங் திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் … Continue reading
நாஞ்சில் நாடன் லைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாசல். தொடர்ந்து ஐந்து … Continue reading
ஆத்மா நாஞ்சில் நாடன் ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, … Continue reading
This gallery contains 6 photos.
தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று … Continue reading
பேச்சியம்மை மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை … Continue reading
நாஞ்சில் நாடனின் “தெரிவை” ‘நீலவேணி டீச்சர் ‘ சிறுகதை http://tvrk.blogspot.com/2010/03/blog-post_05.html வார இதழ்களில் சிறுகதைகளே அதிகம் வருவதில்லை என வாசகர்கள் சொல்வதும்..சிறுகதைகள் இப்போதெல்லாம் அதிகம் படிக்கப்படுவதில்லை என இதழ் ஆசிரியர்கள் தரப்பு சொல்வதும் வாடிக்கையாய் விட்டது.ஆனால் பல சிறுகதைகள் இன்னமும் நம்மால் மறக்கப் படாமல் மூளையின் ஒரு ஓரத்தில் சப்பணம் போட்டு அமர்ந்துக் கொண்டு இருப்பது … Continue reading