Category Archives: இலக்கியம்

என்பிலதனை வெயில் காயும் 22

This gallery contains 9 photos.

எலும்பில்லாத உயிரினங்களுக்குப் புழு, பூச்சி, எறும்பு, வண்டுகள்-வெயில் கொடுங்கூற்றுவன் என்கிறது திருக்குறள். ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்.‘ எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதைப் போல, அன்பு இல்லாதவரை அறம் காயும் என்பது தெளிவு. 1979-ல் நான் எழுதிய நாவலின் தலைப்பு, ‘என்பிலதனை வெயில் காயும்.’ இந்த 33ஆண்டுகளில் பலர் என்னிடம் நாவல் தலைப்பின் பொருள் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

கொடுக்கல் வாங்கல்

This gallery contains 8 photos.

காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை. “கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள். அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: http://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ சதகம் சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: http://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://solvanam.com/?p=20535 ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர். தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

காதல் போயின், காதல் போயின்….

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் . . இனிது காதலி திருமுகம் காண்டல் இனிது காதலி மென்சொல் கேட்டல் இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல் இனிது காதலி எண்ணி இருத்தல் இனிது காதலி கனவில் தோன்றல் இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல் இனிது காதலி வாய்ச்சுவை அறிதல் இனிது காதலி முலைதலை சாய்த்தல் இனிது காதலி அல்குல் தைவரல் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

தலைகீழ் விகிதங்கள் 3

This gallery contains 6 photos.

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம். ‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

மாமிசப் படப்பு 3

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது நாஞ்சில்நாடன் முன்கதை மாமிசப் படப்பு       … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தக்கயாகப் பரணி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு. பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

இன்று…. ஒன்று….நன்று….

This gallery contains 1 photo.

வாருங்கள் எல்லாம் பேசுவோம்..  03-05-2012 தேதி முதல் 09-05-2012-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம். உள்ளத்தில் உள்ளதைப் பேசுவோம்……நாஞ்சில் நாடன்

More Galleries | | 3 மறுமொழிகள்

தலைகீழ் விகிதங்கள் 2

This gallery contains 7 photos.

முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்…

This gallery contains 1 photo.

செங்கோவி நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார். … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

மாமிசப் படப்பு 2

This gallery contains 8 photos.

முதற்பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வந்துவிட்ட நிலையில் இந்த புத்தகம் இப்போதுதான் என் பார்வைக்குப் பட்டிருக்கிறது.இயல்பாகவே நான் ஒரு சராசரி வாசகன் என்ற காரணமாககூட இருக்கக்கூடும்.ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறப்பெடுக்கும் நூல்களுக்கு சரியான திறனாய்வு மேற்கொள்ள படுவதில்லை என்ற தனது ஆதங்கத்தை மாமிசப்படைப்பு இரண்டாவது பதிப்பில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.அவர் கூற்று ஞாயமானதும் கூட.கடைசியாக பெரியவர் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

என்பிலதனை வெயில் காயும் 21

This gallery contains 9 photos.

வட்டார வழக்கு நாவல்கள் என்று வகைப்படுத்துவது ஆராய்ச்சியாளர்கள் வசதி கருதி செய்துகொள்வது.அவர்களின் கோணத்தில் அது சரியாகவே இருக்கும்.ஆனால் படைப்பை அவ்வாறெல்லாம் வகைபிரித்து இது வாதக்கோடாரித் தைலம்,இது பிண்ட தைலம் ,இது ஆலம்பால் எண்ணெய்,இது கருங்குரங்கு லேகியம்,இது முக்கூட்டு எண்ணெய் என்று குப்பிகளில் அடைத்துவிட முடியாது.வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

அமீரக இலக்கியக் கூடல்.

This gallery contains 4 photos.

அமீரக தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் இலக்கியக்கூடல் பங்குபெறுபவர்கள்: நாஞ்சில்நாடன் ஜெயமோகன் 12.04.2012 வியாளன் மாலை. ஷிவ்ஸ்டார் பவன் உணவகம் கராமா துபாய் நன்றி: ஷென்ஷி

More Galleries | | 2 மறுமொழிகள்

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  ””பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

More Galleries | | மறுமொழியவும்