Category Archives: “பனுவல் போற்றுதும்”

அம்பறாத் தூணி

This gallery contains 10 photos.

கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பனுக்குள் வந்த கதை (2)

This gallery contains 8 photos.

ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில்  மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்             … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பனின் அம்பறாத் தூணி

This gallery contains 3 photos.

என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன். இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம். அது எனக்குப் பொருட்டில்லை. எனது இலக்கு, கம்பனைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்மணிக்கோவை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இடைக்காலத்தில் எழுந்து முக்கியத்துவம் பெற்ற சிற்றிலக்கிய வகைகளில் மும்மணிக்கோவையும் ஒன்று. வீரமாமுனிவர் பட்டியலிட்ட 96 பிரபந்தங்களில் எட்டாவது வகை இது. நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் பாவினங்கள் முறையாக மூன்றாக அடுக்கிவர, முப்பது செய்யுள்கள் அந்தாதித் தொடையில் அமைந்தால் அது மும்மணிக்கோவை. முறையாகத் தமிழ் கற்றவருக்கே மூலத்திலிருந்து குருதி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் திரு.நாஞ்சில் நாடன் சொல்வனத்தில் எழுதி வரும் ‘பனுவல் போற்றுதும்’ தொடரில் ‘சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்களி’ன் இறுதிப்பகுதி இது. நவீன இலக்கியம், மரபிலக்கியத்தின் அறியப்படாத பல முக்கியமான ஆக்கங்கள், தாவரங்கள், மீன்கள் குறித்த முக்கியமான புத்தகங்கள் எனப் பல்வேறு பட்ட நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய இத்தொடரின் முதல் பகுதி, தமிழினி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்துள்ளது. … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 16

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் பிரபந்தம் எனில் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். கட்டப்படுவது என்பது இலக்கண வரையறைகளால் இறுக்கமாகச் செய்யப்படுவது என்று பொருள்கொள்ளலாம். பந்தம் என்றால் கட்டு என்றுதானே அர்த்தம். மேலும் அளவில் சிறியதானது. இவற்றைத்தாம் நாம் சிற்றிலக்கியங்கள் என்றோம் இதுகாறும். வட்டார அளவில், கடவுள் மீதும், மன்னர்கள் மீதும், வள்ளல்கள் மீதும், … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15 B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:பனுவல் போற்றுதும் கொங்கு மண்டல சதகம் கொங்கு மண்டலத்தின் வரலாற்றை, சிறப்பை உரைப்பது இந்நூல். இயற்றியவர் கார்மேகக் கவிஞர். கார்மேகம் என்பது இன்றும் கொங்கு மண்டல ஆண்பாற் பெயர். அந்தப் பெயர் கொண்ட கொங்குப் பகுதி இளைஞர், புலவர் இரணியன் மருமகன், கோவையில் முதன்மைக் கல்வி அதிகாரியாக இருந்தார், சில ஆண்டுகள் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -13

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருச்சதகம் மாணிக்கவாசகர் அருளிய திருச்சதகம், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளினுள் அடக்கம், பன்னிரு திருமுறைகளோ இறவாத் தமிழ் இலக்கியங்களினுள் அடக்கம். திருவாசகத்துக்கு திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை எழுதியுள்ளார். இவர் வேறு, இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகர் வேறு. “தாமரைப் பூத்த தடாகமடி” நினைவுக்கு வரவில்லை என்றால் இசைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:http://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா? காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: http://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ சதகம் சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: http://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://solvanam.com/?p=20535 ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர். தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தக்கயாகப் பரணி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு. பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  ””பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக