மாதாந்தத் தொகுப்புகள்: ஒக்ரோபர் 2011

எட்டுத் திக்கும் மதயானை 8.2

This gallery contains 6 photos.

நாவல், நாஞ்சில் நாட்டில் ஆரம்பித்து ஆந்திராவில் தஞ்சம் புகுந்து, பின்  அங்கிருந்து கொங்கன் நாட்டுக்குப் பயணித்துக் கடைசியில்  மும்பையில் சங்கமிக்கிறது. இந்த எல்லா இடங்களுக்கும், கதை நாயகன் பூலிங்கத்துடன் நம்மையும் பயணிக்க வைப்பதுடன், அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து, ‘தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்பது போல நாஞ்சில் நாடன் இந்த ஆரவாரமில்லாத அற்புதப்புதினத்தைப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 6

This gallery contains 14 photos.

நாஞ்சில்நாடன் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள் என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம். ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க முடியாத குதிரை…….(கதிர்)  தொடரும்…… எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாக்கோட்டை

This gallery contains 2 photos.

சுடலை நோக்கிய என் வழித்தடத்தில் செங்கொன்றையாய் நேசம் பூத்துச் சொரியும் சாக்கோட்டைக்கு இன்னும் சில அடியீடு மட்டும் வாழும் ஆசையோ வானினும் உயர்ந்தன்று எனினும் இனித் திரும்ப ஒண்ணாது அலை ஓயவும் மாட்டாது. ……………………………………………………………………நாஞ்சில்நாடன்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 7

This gallery contains 9 photos.

சுடலையாண்டியின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்… எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்… அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்… தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்…( சுபத்ரா) நாஞ்சில்நாடன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 3

This gallery contains 13 photos.

நேர் காணல்:   கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது ,அக்டோபர் 2011 முன்பகுதிகள் கீரனூர் ஜாகீர்ராஜா-புத்தகம் பேசுது-நேர்காணல் 1 கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 நாஞ்சில் நாடன்       எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்ணற்க கள்ளை

This gallery contains 10 photos.

நாஞ்சில் நாடன் ..

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாடகம்

This gallery contains 8 photos.

எனக்கோ என் எழுத்துக்கோ Promoters அல்லது Sponsors கிடையாது.  அதற்கான  விலை கொடுக்க என்னால் இயலாது. என் எழுத்து நிற்பதும் பேசப்படுவதும் அதன் படைப்புத் தகுதிகள் சார்ந்து மட்டும்தான். எந்தக் கலை இலக்கியக் குழுக்களின் ஆதரவும் எனக்குக் கிடையாது. எந்த சிறுபத்திரிக்கைக் கூடாரத்திலும் நான் இல்லை. அதனால் ஏற்படும் புறக்கணிப்புக்களையும் உணர்ந்துதான்  இருக்கிறேன். அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. முதல்தரம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விரகம்

This gallery contains 1 photo.

(இன்னொரு முத்தொள்ளாயிரப் பாடலின் எதிரான மனநிலை எனக்கு,       ‘கூடற் பெருமானைக் கூடலாற் கோமானைக்       கூடப் பெறுவனேல் கூடென்று – கூடல்       இழைப்பாற்போல் காட்டி இழையா நிற்கும்      பிழைப்பிற் பிழைப்பாக்கு அறிந்து’      ஏனெனில் தமிழ்மொழி நேற்றுப் பிறந்த மொழியல்ல, இன்று புதிதாக வந்த நான் சின்னச் சாதனையில் கொடி நாட்டிவிட்டுப் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காலக் கணக்கு – தொடர்ச்சி

This gallery contains 10 photos.

ஒரு முத்தொள்ளாயிரப் படலை, ஒரு சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பேன்.       ‘வீறு சால்மன்னர் விரிதாம வெண்குடையைப்       பாறஎறிந்த பரிசனத்தால் – தேறாது       திங்கள் மேல் நீட்டும் தான் கை’ என்று.  கிட்டத்தட்ட அந்த யானையின் நிலைதான் எனக்கும். திங்கள் மீது கை நீட்டும் முயற்சி. முயற்சி கூடுமா கூடாதா என்பதல்ல, முயற்சி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காலக் கணக்கு

This gallery contains 11 photos.

நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ……..(ஜெயமோகன்)     நாஞ்சில்நாடன்                                                                                                                                 தொடரும்…. எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=16827 நாஞ்சில்நாடன்  மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2

This gallery contains 14 photos.

  எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம்

This gallery contains 4 photos.

கவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா?           புனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை 8.1

This gallery contains 12 photos.

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறுதெய்வம்

This gallery contains 1 photo.

நினைப்பதை விரும்புவதைப் பேசயிலாத, மந்திரத்தில் கட்டுண்ட சிறு தெய்வம் யாம் பெயர் சுடலை மாடன் , கழுமாடன் , புலைமாடன் யாதெனில் என்? உறுமல் , குமுறல் , சைகை நயனத்து அசைவு  ,நடமிடும் காற்சுவடு எம் மொழி கூக்குரல் எம் சிலிர்ப்பு ஊளை எம் கானம் உன் குலக் காவல் எம் தொழில் நீ … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்